சென்னை, டிச.18 - கனமழையால் பாதிப்புக் குள்ளான நெல்லை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த அவகாசம் வழங்கப்பட்டுள் ளது.
தமிழ்நாட்டில் வீடுகளுக் கான மின் இணைப்பு பொறுத்தவரை கட்டணம் கணக்கீடு செய்யப்பட்ட 20 நாட்களுக்குள் மின் கட்டணம் செலுத்த வேண்டும். இல்லையெனில் அபராதம் விதிக்கப்படும்.
அண்மையில் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பெய்த கனமழை காரண மாக நீர் தேங்கியதால் கணக்கீடு செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் மின் நுகர்வோருக்கு கட்ட ணம் செலுத்துவதற்கு வாரி யம் அவகாசம் வழங்கப் பட்டது.
இந்த நிலையில், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியா குமரி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் அதிக கன மழை கொட்டி வருகிறது. சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்தது. வீடு களுக்குள் மழைநீர் புகுந்த தால் மக்கள் வாழ்வாதா ரம் முற்றிலும் பாதிக்கப்பட் டுள்ளது.
மேலும், மக்களின் உடை மைகள் பாதிப்புக்குள்ளா னது, போக்குவரத்து துண்டிப்பு, மின் விநியோ கம் பாதிப்பு உள்ளிட்ட கார ணங்களால் இணைய வழியில் கட்டணம் செலுத்த முடியாத சூழல் உள்ளது.இதனால் 5 மாவட்ட நுகர் வோருக்கு மின் கட்டணம் செலுத்த அவகாசம் வழங்கி மின் துறை உத்தரவிட்டுள் ளது.
மேலும், மக்களின் உடை மைகள் பாதிப்புக்குள்ளா னது, போக்குவரத்து துண்டிப்பு, மின் விநியோ கம் பாதிப்பு உள்ளிட்ட கார ணங்களால் இணைய வழியில் கட்டணம் செலுத்த முடியாத சூழல் உள்ளது.இதனால் 5 மாவட்ட நுகர் வோருக்கு மின் கட்டணம் செலுத்த அவகாசம் வழங்கி மின் துறை உத்தரவிட்டுள் ளது.