tamilnadu

img

சின்னசேலம் அரசு மருத்துவமனையை மேம்படுத்துக: சிபிஎம் ஆர்ப்பாட்டம்

சின்னசேலம், டிச. 23- சின்னசேலம் வட்ட அரசு மருத்து வமனையை மேம்படுத்த வேண்டும், குடிநீர்ப் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சின்னசேலம் வட்டக்குழு சார்பில் வட்டாட்சியர் அலுவலகம் அருகே வட்டச்செயலாளர்  டி.மாரிமுத்து தலைமையில் திங்களன்று (டிச. 23)  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோமுகி அணையில் இருந்து சின்னசேலம் ஏரிக்கு தண்ணீர் கொண்டுவர வெட்டப்பட்ட வாய்க்  கால் பணியை விரைந்து முடிக்க  வேண்டும், வனத்துறை கட்டுப்பாட் டில் உள்ள இடத்தில் கால்வாய் பணியை மேற்கொள்ள அனுமதி வழங்க வேண்டும், அனைத்து ஊராட்சிகளிலும் குடிநீர் பிரச்ச னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்  டும், 100 நாள் வேலையை அமலாக்கி  சட்டப்படியான கூலி வழங்க வேண் டும், சின்னசேலம் நெல் அரவை ஆலைகளில் பணிபுரியும் டிரைவர் உள்ளிட்ட தொழிலாளர்களுக்கான மனைப் பிரிவில் தனி நபர்களுக்கு பட்டா வழங்கியதை ரத்து செய்ய  வேண்டும், மாணவர்கள் விடுதிகளில்  கழிப்பறை வசதி, தண்ணீர் வசதி  ஏற்படுத்த வேண்டும் என்பன உள்  ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப் பட்டன. இதில் மாவட்டச் செயலாளர் டி.ஏழுமலை, செயற்குழு உறுப்பி னர் பி.சுப்பிரமணியன், வட்டக்குழு உறுப்பினர்கள் பி.பழனி, கே.மூக்கன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். இறுதியில் வட்  டாட்சியர் அலுவலகத்திலும், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் மனு அளிக்கப்பட்டது.