சென்னை, மார்ச் 19- வில்லிவாக்கம் பேருந்து முனையம் மெட்ரோ நிலையத்தில் 5ஆவது நடை பாதை அமைக்க வசதியாக, அப்பகுதி யில் உள்ள பேருந்து நிலையம் தற்காலிகமாக ஐசிஎப் மைதானத்திற்கு இரண்டு ஆண்டுகளுக்கு மாற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலை யில் அரசு பேருந்து நிலையத்தை மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. பெருநகர போக்குவரத்துக் கழகம் தற்காலிக பேருந்து நிலையத்தை அமைக்க ஐசிஎப்-பில் உள்ள 1,441 சதுரமீட்டர் அளவுள்ள நிலத்தை பயன்படுத்து வதற்கு இரு துறைகளுக்கும் இடையே குத்தகை ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த பேருந்து நிலையம் பணிகளை மெட்ரோ மேற்கொள்ள உள்ளது. எனவே மெட்ரோ நிறுவனம் ஐசிஎப் நிலத்தை ரூ.52.04 லட்சத்துக்கு குத்த கைக்கு எடுத்துள்ளது. மேலும் கட்டு மானப் பணிகளுக்கும் திட்டமிட்டுள் ளன. இதுகுறித்து மெட்ரோ அதிகாரிகள் கூறியதாவது: தற்காலிகக் கட்டமைப்பை கட்டு வதற்காக அரசு போக்குவரத்துக் கழகத் துடன் இணைந்து ஆய்வு நடத்தப் பட்டது. எங்களின் ஒப்பந்த நிறுவன மான டாடா ப்ராஜெக்ட்ஸ் லிமிடெட் இதை விரைவில் கட்டி முடிக்கும்.
வில்லிவாக்கம் பேருந்து நிலையத்தில் தினசரி 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் பயணிகள் வந்து செல்கின்றனர். சுமார் 73 பேருந்துகளும், 7 மினி பேருந்து களும் இயக்கப்படுகின்றன. இங்கிருந்து பெரம்பூர், பிராட்வே, துறைமுகம், பெசன்ட் நகர் மற்றும் திரு வான்மியூர் ஆகிய பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 27டி மற்றும் 47 போன்ற பேருந்துகளுக்கு அதிக தேவை இருப்பதாக கூறப்படு கிறது. இந்த பேருந்துகள் பல முக்கிய இடங்கள் மற்றும் நகரக் கல்லூரிகளை இணைப்பதால், மாற்றப்பட்டவுடன், ஐசிஎப் மைதானத்தை அணுக இங்கி ருந்து மினி பேருந்துகளை இயக்க வேண்டிய அவசியம் ஏற்படும்.
இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்து ள்ளனர்.