tamilnadu

img

வடசென்னையின் வளர்ச்சிக்காக மக்களவையில் குரல் கொடுப்பேன்

சென்னை, ஏப். 10- வடசென்னையின் வளர்ச்சிக்காக மக்களவை யில் தொடர்ந்து குரல் கொடுப்பேன் என்று கலாநிதி  வீராசாமி தெரிவித்தார். வடசென்னை மக்கள வைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கலாநிதி வீரா சாமி ஆர்.கே. நகர் 38, 41, 47 ஆகிய வார்டுகளில் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்தார்.

அப்போது அவர் பேசு கையில், திமுக ஆட்சி பொறுப்பேற்ற 3 ஆண்டு களில் மகளிருக்கு இலவச பேருந்து பயணம், மகளிர் உரிமைத்தொகை, காலை சிற்றுண்டி திட்டம், மக்களை  தேடி மருத்துவம் என பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் நடந்த அவலங்களை இந்த மக்கள் நன்கு அறிவீர்கள். மழை வெள்ளம் மற்றும்  கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்ட பகுதிக்கு  சென்று மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினேன்.

மேலும்  ஆர்.கே. நகர் பகுதிக்கு தொகுதி மேம்பாட்டு நிதி  மற்றும் தொழிற்சாலை களின் சமூக பாதுகாப்பு நிதி என மொத்தம் 7 கோடியே  49 லட்சம் ரூபாய்க்கு பணிகள் செய்து கொடுத்துள்ளேன். என்னை நீங்கள் மீண்டும்  தேர்தெடுத்தால், மென்மே லும் இதுபோன்ற பணிகளை  தொடருவேன். அரசு நலத் திட்டங்கள் அனைவருக்கும் கிடைத்திட நடவடிக்கை எடுப்பேன். மீனவர்களின் நலன்களை பாதுகாக்க நடவடிக்கை எடுப்பேன் என்று கூறினார்.

இதில் சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் ஆர்.டி. சேகர் எம்.எல்.ஏ, சட்டமன்ற  உறுப்பினர் ஜே.ஜே.எபினே சர், பகுதிச் செயலாளர் லட்சு மணன், காங்கிரஸ் மாவட்ட  தலைவர் எம்.எஸ்.திரவியம்,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எல்.சுந்தர ராஜன், செயற்குழு உறுப்பி னர் ஆர்.லோகநாதன், பகுதிச் செயலாளர் வெ.ரவிக்குமார், மாமன்ற உறுப்பினர் பா.விமலா, சிபிஐ மாவட்டச் செயலா ளர் த.கு.வெங்கடேஷ்  வேம்புலி, விசிக மாவட்டச் செயலாளர் சவுந்தர் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி யினர் கலந்து கொண்டனர்.