நத்தை வேகத்தில் ஓசூர் - கிருஷ்ணகிரி மேம்பாலப்பணி'
கிருஷ்ணகிரி, ஏப்.24 - ஓசூர் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில்,2 ஆண்டுகள் கடந்தும் முடியாத மேம்பால பணிகளால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகிவருகின்றனர். கிருஷ்ணகிரி பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஓசூர் சிப்காட்டில் மேம்பால பணி துவங்கி 2 ஆண்டுகளும்,பிற 5 இடங்களில் 18 மாதங்களும் கடந்துள்ளது. சேலம் - பெங்களூரு, திரு வண்ணாமலை - பெங்களூரு, சென்னை - பெங்களூர் 3 சாலை களும் கிருஷ்ணகிரி வழியாகத் தான் ஓசூர் பெங்களூரு சென்று வர வேண்டியுள்ளது. கிருஷ்ண கிரியிலிருந்து பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தினமும் 70ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்களும், விடுமுறை நாட்களில்,1 லட்சத்திற்கும் மேற்பட்ட வாகனங்களும் சென்று வருகின்றன. பெங்களூரு, சென்னைக்கு நிகராக அசுர வேகத்தில் தொழிற்சாலைகள் பெருகி வரும் ஓசூர் சுற்றுவட்டார பகுதியிலும்,தொழிற்சாலைக்கு இடுபொருள்கள் கொண்டு வரும் வாகனங்களும், தொழி லாளர்களை ஏற்றிக்கொண்டு வரும் வாகனங்களும் ஜெட் வேகத்தில் அதிகரித்து வருவதால் இச்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ஓசூர் சிப்காட் சந்திப்பு,கோபசந்திரம், சாமல்பள்ளம், சுண்டகிரி, மேலுமலை, போலுப்பள்ளி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவ மனை முன்பு என மொத்தம், 6 இடங்களில் மேம்பாலம் கட்டும் பணியை,ஒரே நேரத்தில் 2023 அக்டோபரில் தேசிய நெடுஞ்சாலைத்துறை துவங்கியது. பாலா பணி கள் துவங்கிய போது 12 மாதத்தில் பால பணிகள் முடிக்கப்பட்டு விடும் என்றனர்.18 மாதங்கள் கடந்து சாமல் பள்ளம் பகுதியில் மட்டும் பணி முடிவடையும் நிலையில் உள்ளது.மீதம் 5 இடங்களிலும் நத்தை வேகத்தில் பணிகள் நகர்ந்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் தினமும் அவதிப்பட்டு வரு கின்றனர். வெள்ளி,சனி,ஞாயிறு விடுமுறைகள் வரும்போது, பெங்களூரு, ஓசூர் பகுதியில் இருந்து சொந்த ஊருக்கு மக்கள் படையெடுக்கின்றனர். விடுமுறை முடிந்ததும் சேலம், திருவண்ணாமலை, சென்னை சாலைகள் வழியாக கிருஷ்ணகிரி கடந்து ஓசூர், பெங்களூருக்கு வேலைக்கு படையெடுக்கின்றனர். இந்த இரு சமயங்களிலும் போக்கு வரத்து நெரிசல்,மிகக் கடும் நெருக்கடிகள் ஏற்படுகிறது. அந்த நேரம் மேம்பால பணி கள் நடக்கும் 6 பகுதிகளிலும் போக்குவரத்து முடங்கி,5 கி.மீதூரம் வரை வாகனங்கள் ஸ்தம்பித்து நிற்கின்றன. பாலப்பணிகள் துவங்கு வதற்கு முன்பு ஒரு மணி நேரத்தில் செல்லும் வாக னங்கள் தற்போது 2 மணி நேரத்திற்கும் மேலாகிறது.பல நேரங்களில் மிகவும் அவசரமாக மருத்துவத்துக்கு செல்ல வேண்டிய அவசர ஊர்திகள் கூட கடும் நெருக்கடியில் சிக்கிக்கொள்கிறது. காலை, மாலை வேலைகளில் பள்ளி, கல்லூரிகளுக்கும், தொழிற் சாலைகளுக்கும் தினமும் அரை மணி நேரத்திற்கு மேல் தாமதமாக செல்ல வேண்டிய இக்கட்டான நிலை உள்ளது.வேலைகள் துவங்கி 2 ஆண்டுகள் முடியப் போகும் நிலையில் இதே மந்த கதியில் கட்டுமான பணிகள் நடைபெற்றால் பணிகள் முடிய இன்னும் ஓராண்டு தாண்டும். எனவே ஒன்றிய அரசின் தேசிய நெடுஞ்சாலைத்துறை விரைவில் பாலப்பணிகளை நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்க ளும், சமூக ஆர்வலர்களும், பய ணிகளும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். - ஒய்.சந்திரன்