tamilnadu

img

10,11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜன.31 வரை விடுமுறை

10,11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 31ஆம் தேதி வரை விடுமுறை அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக, தமிழகத்தில் 1 முதல் 9 வரையிலான வகுப்புகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு தற்போது 10 முதல் 12 வரையிலான வகுப்புகள் மட்டும் செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில், கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் ஜனவரி 31ஆம் தேதி வரை 10,11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

இதனையடுத்து, வரும் 19 அன்று தொடங்கி 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு நடக்கவிருந்த தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுகின்றன. தேர்வு குறித்த அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.