tamilnadu

img

திருத்தணிகாசலம் மீதான குண்டர் சட்டத்தை உயர்நீதிமன்றம்  ரத்து செய்தது....

சென்னை:
சித்த மருத்துவர் திருத்தணிகாசலம் மீதான குண்டர் சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக வதந்தி பரப்பியதாக சித்த மருத்துவர் திருத்தணிகாசலத்தை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அதன்பின்னர் அவர் மீது கொடுக்கப் பட்ட புதிய புகார்களின் அடிப்படையில் பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப் பட்டன. இதனால் குண்டர் சட்டத்தில் அவர் கைது செய்யப்பட்டார்.இந்நிலையில் சித்த மருத்துவர் திருத்தணிகாசலம் மீதான குண்டர் சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.சித்த மருத்துவர் திருத்தணிகாசலம் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி அவரது தந்தை தொடர்ந்த வழக்கில் சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கொரோனா மருந்து, முதலமைச்சர் குறித்து வீடியோ வெளியிட்டதால் சித்த மருத்துவர் திருத்தணிகாசலம் மே மாதம் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத் தக்கது.