tamilnadu

img

கலாஷேத்ரா விவகாரத்தில் விரிவான கொள்கையை வகுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

கலாஷேத்ரா கல்வி நிறுவனங்களில் மீதான பாலியல் தொல்லை புகார்கள் குறித்த விரிவான கொள்கையை வகுக்க வேண்டும் எனவும் உள் விசாரணைக் குழுவில் பெற்றோர் மாணவிகளை பிரதிநிதிகளாக சேர்க்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
  சென்னை கலாஷேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள குழுவில் கலாஷேத்ரா அறக்கட்டளை இயக்குநர் ரேவதி ராமச்சந்திரன் இடம் பெறக் கூடாது எனவும், குழுவில் மாணவிகளின் பிரதிநிதிகள், பெற்றோரின் பிரதிநிதிகள் இடம்பெறும் வகையில் மாற்றியமைக்க வேண்டும் என்றும் கோரி கல்லூரி மாணவிகள் ஏழு பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில்  தொடர்ந்த வழக்கை ஜூன் 15 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து  தள்ளிவைத்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 பாலியல் தொல்லை தொடர்பான வழக்கை காவல்துறையும் , நீதிபதி கண்ணன் குழுவும் தொடர்ந்து விசாரிக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. 
 

;