tamilnadu

img

ரயில்வே மருத்துவமனை உதவியாளர்கள் பணியிடம்

சென்னை, ஜன.6- ரயில்வே மருத்துவமனைகளில் ஒப் பந்த அடிப்படையில் உதவியாளர்களை நிய மிக்க சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. ரயில்வே மருத்துவமனையில் உதவி யாளர்கள் பணிக்கு ரயில்வே பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் 202 பேர் தேர்வு  எழுதி நேர்முகத்தேர்வில் கலந்து கொண்டு முறைப்படி தேர்வுசெய்யப்பட்டனர்.  

ஆனால் இவர்களை ஒப்பந்த அடிப்படை யில் ரயில்வே நிர்வாகம் நியமித்தது. இதை யடுத்து 202 பேரும் தங்களை நிரந்தர ஊழி யர்களாக நியமிக்கக்கோரி தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் (டிஆர்இயு) சார்பில்  மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் வழக்கு தொடுத்தனர். ஆனால் அவர்களது  கோரிக்  கையை தீர்ப்பாயம் நிராகரித்து, கடந்த மாதம்  19 ஆம் தேதி உத்தரவிட்டது.

இதையடுத்து 202 ஒப்பந்த ஊழியர்களை நீக்கி விட்டு, அந்த இடங்களில் புதிய ஊழி யர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க  ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. இந்நிலையில் தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து டிஆர்இயு சார்பில் சென்னை உயர்  நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ஒப்பந்த தொழிலாளர்கள் நிய மனத்தில் தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என்று கடந்த மாதம் 20 ஆம் தேதி  உத்தரவிட்டது. இதற்கிடையில்,202 பேருக்கு பதிலாக ரயில்வே நிர்வாகத்தின்  சார்பில் புதிதாக ஒப்பந்த ஊழியர்கள் தேர்வுசெய்யப்பட்டு அவர்களுக்கு பணி நியமன உத்தரவுகள்  பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில் இவர்  களை பணி நியமனம் செய்ய தடை விதிக்க  வேண்டும் என தட்சிண ரயில்வே எம்ப்ளா யீஸ் யூனியன் சார்பில் கூடுதல் மனு தாக் கல் செய்யப்பட்டது. இந்த மனு, நீதிபதிகள் சுரேஷ் குமார்  மற்றும் குமரேஷ் பாபு அமர்வில் விசார ணைக்கு வந்தது. அப்போது டிஆர்இயு சார்  பில் ஆஜரான வழக்கறிஞர்,  202 ஊழியர்  களுக்கு பதிலாக புதிதாக ஒப்பந்த ஊழி யர்களை நியமித்தால் அது இந்த வழக்கை  பயனற்றதாக்கி விடும். எனவே  புதிதாக ஊழி யர்களை நியமிக்க தடை விதிக்க வேண்டும் என வாதிட்டார்.

 இந்த 202 ஊழியர்கள்  ரயில்வே  மருத்துவமனையின் சுகாதார பிரிவில்  பல்வேறு துறைகளில் பணியாற்றி வந்த வர்கள். பெருந்தொற்று காலத்தின் போது உயிரையும் பொருட்படுத்தாமல் சிறப்பாக பணியாற்றிய இந்த தொழிலாளர்களை நீக்கிவிட்டு புதிய ஊழியர்களை நியமிப்பது சரியல்ல என்றும் சுட்டிக்காட்டப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரயில்வே  நிர்வாகம் சார்பில் ஆஜரான வழக்கறி ஞர், ஏற்கனவே இருந்த ஊழியர்களின் நியமனம் ரத்து செய்யப்பட்டுவிட்டதாகவும் புதிய ஊழியர்களை தேர்வு செய்யும் நட வடிக்கைகள் 2023 ஆம் ஆண்டு மார்ச் மாத மே தொடங்கிவிட்டது என்றும் கூறினார்.

பணி நிரந்தரம் செய்யவேண்டும் என்ற  கோரிக்கையை ஒன்றிய நிர்வாக தீர்ப்பாயம் நிராகரித்துள்ளதையடுத்து, புதிதாக ஊழியர்கள் 60 நாட்களுக்கு நிய மிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப் பட்டது. ரயில்வே நிர்வாகம் முன்வைத்த இந்த வாதங்களை ஏற்க மறுத்த நீதிபதி கள், இந்த விவகாரத்தில் தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என்ற உத்த ரவை ரயில்வே நிர்வாகம் மீறியுள்ளதாக கூறினர்.  புதியதாக ஒப்பந்த தொழிலாளர்க ளை நியமிக்க இடைக்கால தடை விதித்த நீதி பதிகள், மருத்துவமனைகளில் உதவியா ளர்கள் பற்றாக்குறை இருந்தால், அந்த இடங்களில், வழக்கு தொடுத்துள்ள டிஆர்இயு சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ளவர்களை  பயன்படுத்திக் கொள்ள லாம். இதுகுறித்து  ரயில்வே நிர்வாகம் பதில் அளிக்க  உத்தரவிட்ட நீதிபதிகள், விசார ணையை பிப்ரவரி 3-வது வாரத்திற்கு தள்ளி வைத்தனர். இந்த வழக்கில் டிஆர்இயு சார்பில் மூத்த வழக்கறிஞர் ஆர்.வைகை ஆஜரானார்.