tamilnadu

img

சென்னை முக்கிய செய்திகள்

கடலூர் விளையாட்டுத் திடலை மதிப்பு கூட்டு மையமாக மாற்ற உயர்நீதிமன்றம் இடைக்கால தடை

கடலூர், மே 26- கடலூரில் 200 ஆண்டுகள் பழமையான விளையாட்டுத் திடலை பலாப்பழ மதிப்பு கூட்டு மையமாக மாற்றுவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜி.ராஜலிங்கம் தாக்கல் செய்த மனுவில், சி.என்.பாளையம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பட்டீஸ்வரம் கிராமத்தில் 2 ஏக்கர் பரப்பளவில் ‘மலைத் திடல்’ என அழைக்கப்படும் விளையாட்டு மைதானம் பள்ளி மாணவர்களால் பயன்படுத்தப்படுகிறது என்று கூறப்பட்டது.  ஆட்சியர் உத்தரவு மக்களிடம் கருத்துக்கேட்புக் கூட்டம் நடத்தாமல், கடலூர் மாவட்ட ஆட்சியர் பலாப்பழ மதிப்பு கூட்டு மையம் கட்ட கடந்த ஜனவரியில் அனுமதி வழங்கியுள்ளார். தீர்ப்பு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், வி.லட்சுமி நாராயணன் அடங்கிய அமர்வு கடலூரில் பலாப்பழ மதிப்பு கூட்டு மையம் அமைக்க இடைக்கால தடை விதித்து, கடலூர் மாவட்ட ஆட்சியர், மாவட்ட வேளாண் உதவி இயக்குநர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டது.

கல்வராயன்மலை நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

'கள்ளக்குறிச்சி, மே 26 - தமிழகத்தில் கடந்த ஒரு வார காலமாக பெய்து வரும் மழையால் கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை மற்றும் அதன் சுற்றுவட்டார மலைக் கிராமங்களில் பெரியார் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. அதுமட்டுமின்றி கோமுகி அணை, ஏரி, குளம், கிணறு போன்றவையும் நிரம்பி வருகின்றன. பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை காலம் என்பதால், கோமுகி அணை மற்றும் கல்வராயன்மலையில் உள்ள சுற்றுலாத் தலங்களைப் பார்வையிட பல்வேறு மாவட்டங்களிலிருந்து சுற்றுலாப் பயணிகள் தங்களது குடும்பத்துடன் தினந்தோறும் வந்து செல்கின்றனர். பெரியார் நீர்வீழ்ச்சியில் தற்போது ஆர்ப்பரித்து நீர் கொட்டுவதை ஆர்வத்துடன் பார்க்கும் சுற்றுலா பயணிகள் இந்த நீர்வீழ்ச்சியில் தங்களது குடும்பத்தாருடன் குளித்து மகிழ்ச்சியுடன் செல்கின்றனர்.

விவசாயிகளுக்கு  உலர்களம் அமைக்க கோரிக்கை

கள்ளக்குறிச்சி, மே 26 - கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சங்கராபுரம் ஒன்றியத்தைச் சேர்ந்த பாலப்பட்டு, கொசப்பாடி, அரசம்பட்டு, மல்லாபுரம் ஆகிய கிராமங்களில் மக்காச்சோளம் சாகுபடி செய்து வரும் விவசாயிகள் சார்பில் மாவட்ட நிர்வாகத்திற்கு உலர்களம் அமைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் மக்காச்சோளத்தை உலர்த்தி விற்ப னைக்குக் கொண்டுசெல்வதற்கு உலர்களம் இல்லாத தால், சாலையில் கொட்டி உலர்த்தி வருகின்றனர். இதனால் இருசக்கர வாகனங்கள் மற்றும் பேருந்துகள் செல்வதற்கு சிரமமாக உள்ளதுடன், பல நேரங்களில் விபத்து ஏற்படும் சூழ்நிலையும் உருவாகியுள்ளது.ஆயிரக்கணக்கான ஏக்கரில் இப்பகுதியில் மக்காச்சோளம் விவசாயம் செய்து வரும் விவசாயிகளுக்கு மாவட்ட நிர்வாகம் அந்தந்த பகுதிகளில் உலர்களம் அமைத்துக் கொடுத்தால் விபத்துகள் குறைவதுடன் விவசாயிகளுக்கும் சிரமம் குறையும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

மாணவரை கடித்த பாம்பு அம்பத்தூர்

, மே 26- திருமுல்லைவாயல் அருகே இருசக்கர வாக னத்தில் பதுங்கி இருந்த பாம்பு கடித்த மாணவருக்கு மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அம்பத்தூர் அடுத்த திரு முல்லைவாயல் ஆரிக்கம்பேடு கிராமத்தைச் சேர்ந்தவர் தவசி (20). இவர் திருநின்றவூரில் உள்ள தனியார் தொழில்நுட்பக் பயிலகத்தில் பட்டயப்படிப்பு படித்து வருகிறார். ஞாயிறன்று தவசி, தனது நண்பர்களுடன் விளையாடுவதற்கு இருசக்கர வாகனத்தில் வீட்டில் இருந்து புறப்பட்டார். இவர் பாலவேடு சந்திப்பு அருகே சென்று கொண்டி ருக்கும் போது, இருசக்கர வாகனத்தில் பதுங்கி இருந்த கட்டு விரியன் பாம்பு, இவரது இடது கை நடுவிரலில் கடித்துள்ளது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த தவசி இரு சக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு கீழே விழுந்தார். அப்போது அந்த வழியே வந்த பொதுமக்கள் தவசியை மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

வீட்டுமனைப் பட்டா கேட்டு விவசாய சங்கம் உண்ணாநிலைப் போராட்டம் அறிவிப்பு

ராணிப்பேட்டை, மே 26- ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்களன்று (மே 26) நடைபெற்ற மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் உண்ணாநிலைப் போராட்டம் அறி வித்துள்ளது.இது குறித்து சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எல்.சி. மணி, பொருளாளர் சி. ராதா கிருஷ்ணன், கிளைத் தலை வர் ரமேஷ் ஆகியோர் மாவட்ட வருவாய் அலுவ லரிடம் கோரிக்கை மனு அளித்தனர். இதில், ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா வட்டம், கீழ்மின்னல் கன்னிகாபுரம் புல எண். 148-ல் 50 ஆண்டுகளுக்கு மேலாக 105 வீடுகள் கட்டி தலைமுறைகளாக வாழ்ந்து வரும் மக்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பல மாவட்ட ஆட்சி யர்கள், பல மாவட்ட வருவாய் அலுவலர்கள் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகம் பல முறை நேரில் பார்த்த போதிலும் இம்மக்களுக்கு வீட்டு மனைப்பட்டா கிடைக்க வில்லை. கன்னிகாபுரம் மக்க ளுக்கு வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும் என்று கோரி ஜூன் முதல் வாரத்தில் மாவட்ட ஆட்சி யர் அலுவலகம் முன்பு பெருந்திரள் உண்ணா நிலைப் போராட்டம் நடத்த உள்ளதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அறி வித்துள்ளது.