tamilnadu

பலத்த மழை-அனல் காற்று: வானிலை மையம்

சென்னை, மே 9- தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும், வட தமிழகத்தில் அனல் காற்று வீசும் என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த சூறைக்காற்றுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாகத் திருச்சி மாவட்டம் வள்ளாத்தி அணைக்கட்டு பகுதியில் 10 செ. மீட்டர் மழைப் பதிவாகியுள்ளது.சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட வட தமிழக மாவட்டங்களில் அனல் காற்று வீசும் என்றும், இயல்பை விட 5 முதல் 6 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிக்கும் என்றும் வானிலைஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

;