சென்னை, நவ.15- தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு வடமேற்கு திசை யில் நகர்ந்து மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டல மாக வலுப்பெற்றுள்ளது. இது தற்போது விசாகப் பட்டினத்துக்கு தென் கிழக்கே சுமார், 510 கி.மீ, தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது தொடர்ந்து ஆழ்ந்த காற்ற ழுத்த தாழ்வு மண்டலமாக வலு பெறக்கூடும்
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் சென்னை யில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,“ தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வந்த வளிமண்டல கீழடுக்கு சுழற்சி தொடர்ந்து நிலவுகிறது. மேலும் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் மற்றும் கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துள் ளது. அதிகபட்சமாக சென்னை டிஜிபி அலுவல கத்தில் 19 செ.மீ மழை பதிவாகியுள்ளது. 36 இடங்க ளில் கன மழை பதிவாகி யுள்ளது.
அடுத்த 24 மணி நேரத் துக்கு தமிழ்நாடு, புதுச் சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில், கடலோர மாவட்டங்களில் பெரும் பாலான இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் லேசா னது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். டெல்டா மாவட்டங்கள், புதுக் கோட்டை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதி களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்” என்றார்.