tamilnadu

img

4 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை

சென்னை உள்பட 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தென்மேற்கு வங்கக்கடலில் இலங்கை முதல் வடதமிழக கடற்கரை வரை குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, அடுத்த 24 மணி நேரத்திற்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும்,  தமிழகத்தில் 4 நான்கு நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது