tamilnadu

img

மூன்று நாட்களுக்கு கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை....

சென்னை:
அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மேற்கு மத்திய வங்காள விரிகுடா மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக, ஆந்திரப் பிரதேசம், மேற்கு வங்கம் மற்றும் வடகிழக்கு இந்தியாவில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக  இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.இந்நிலையில், தமிழகத்திலும் வளிமண்டல சுழற்சி காரணமாக மழைக்கு வாய்ப்பு இருப்பதாக ஒரு முன்னறிவிப்பு தகவலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் 3 நாட்களுக்கு 13 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.28 ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ள நிலையில் அடுத்து வரும் மூன்று தினங் களுக்கு அதாவது 26, 27,28 ஆகிய தேதிகளில் தென் தமிழக மாவட்டங்களில் குறிப் பாக குமரி, தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தஞ்சாவூர், நாகை, திருவாரூர்  ஆகிய மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மித மானது முதல் கன மழை பெய்யக்கூடும்.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அடுத்த மூன்று நாட்களில் 13 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் எச்சரித்துள்ளனர்.