tamilnadu

img

முடங்கிய செல்போன் சிக்னல்: தவித்த சென்னைவாசிகள்!

சென்னை, டிச.5 - சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் கடந்த மூன்று நாட்களாக புயலின் காரணமாக கனமழை பெய்தது. இதனால் கடந்த இரண்டு நாட்களாக சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் பொது விடுமுறை அளிக்கப்பட்டது. புதன்கிழமை (டிச.6) பள்ளி-கல்லூரிகளுக்கு மட்டும் விடுமுறை விடப் பட்டுள்ளது. சுமார் 47 ஆண்டு களில் இல்லாத அளவில் அதிக கனத்த மழை பெய்திருக்கிறது.

இந்த சூழலில் சென்னை  மாநகரம் முழுமைக்கும் செல்போன் சிக்னல்கள் பெரிய அளவில் பாதிக்கப் பட்டது. ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் தங்கள் பகுதிகளில் இணைய சேவை செயல் பாட்டில் இல்லை என்கிற தகவல் அளித்து  வருகின்றனர். இணைய வாசிகள். மின்சாரம் துண்டிக் கப்பட்டது. இதுதான் பெரிய பிரச்சனையாக உருவெடுத்தது.

தொழில்நுட்பம் அதிக அளவில் வளர்ந்துவிட்ட தலைநகர் சென்னையில் இணைய சேவைகள் பெரிய அளவில் பாதிக்கப் பட்டுள்ளது. பலருடைய அன்றாட பணிகளை பெரிய அளவில் பாதித்துள்ளது என்று கூறலாம்.