tamilnadu

img

பணியிலிருந்த பொழுது மாரடைப்பு .... சென்னையில் போக்குவரத்து காவலர் மரணம்

சென்னை 
கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளதால் தமிழக போலீசார் இரவு பகல் பாராமல் மக்களை கொரோனவிலிருந்து பாதுகாத்து வருகின்றனர். இந்நிலையில் சென்னை மயிலாப்பூர் பகுதியில் போக்குவரத்து காவலராக இருந்த அருண்காந்தி என்பவர் நேற்று சாந்தோம் பகுதியில் பணியிலிருந்த பொழுது  திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சாலையிலே மயங்கி விழுந்துள்ளார்.

சக காவலர்கள் அருண்காந்தியை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து காவலர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சென்னை பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.