tamilnadu

img

வேளாண்மை துறை கே.பி.அன்பழகனிடம் ஒப்படைப்பு...

சென்னை:
தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கூடுதல் பொறுப்பாக வேளாண் துறை ஒதுக்கீடு செய்யப் பட்டு உள்ளது.முதலமைச்சரின் பரிந்துரையை ஏற்று, அன்பழகனுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளதாக ஆளுநர் மாளிகை செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.இதன்படி, கே.பி. அன்பழகன், இனி உயர்கல்வித்துறை மற்றும் வேளாண் துறை அமைச்சர் என அழைக்கப் படுவார்.கொரோனாவால் உயிரிழந்த அமைச்சர் துரைக் கண்ணு, வேளாண்மை, வேளாண்மை பொறியியல், பட்டுப்பூச்சி வளர்ப்பு, கரும்பு வளர்ச்சி மற்றும் தரிசு நில மேம்பாடு உள்ளிட்ட துறைகளை கவனித்து வந்தார்.எனவே, இத்துறைகளை இனி, உயர் கல்வி அமைச்சர் அன்பழகன் கவனிப்பார் என ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது