காவல்துறை இணையதளத்தை முடக்கிய ஹேக்கர்கள்!
.சென்னை, மே 5- தமிழ்நாடு காவல் துறை குற்றவாளிகள் குறித்த தரவுகளை சேமித்து வைக்க பிரத்யேகமான மென் பொருட்களை பயன் படுத்துகிறது. குற்ற வாளிகள், காணாமல் போனவர்கள், சந் தேகத்துக்குரிய நபர்கள் தொடர்பான தக வல்கள் (எப்ஆர்எஸ்) இணையதளத் தில் பதிவேற்றம் செய்கிறது
இந்த எப்ஆர்எஸ் தளத்தை மென் பொருள் மூலமாகவும் காவல்துறை யினர் பயன்படுத்தி வருகின்றனர். குற்ற வாளிகளை அடையாளம் கண்டு, கைது செய்ய இந்த இணையதளம் மற்றும் செயலி மிகவும் பயனுள்ளதாக இருந்து வருகிறது. இந்நிலையில், தமிழக காவல்துறையின் இந்த இணையதளம் முடக்கப்பட்டு, பாஸ்வேர்டு திருடப்பட் டுள்ளது. இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் தற்போது விசாரணையில் இறங்கியுள்ளனர்.
தென் மாவட்டங்களில் இடியுடன் மழை வாய்ப்பு
சென்னை, மே 5- தமிழகத்தில் பிப்ரவரி இறுதியிலி ருந்து வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரு கிறது. வெயிலுக்கு பலியாவோரின் எண் ணிக்கையும் அதிகரிக்கத் துவங்கி யுள்ளது.
இந்நிலையில் மழைக்கான அறி விப்பை வானிலை ஆய்வு மையம் வெளி யிட்டது. அதில் ஞாயிறன்று இரவு 6.30 மணி வரை 10 மாவட்டங்களில் இடி மின்ன லுடன் மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்தது. அத்துடன், சிவ கங்கை, மதுரை, திண்டுக்கல், திருப்பூர் மற்றும் தேனி என 5 மாவட்டங்களுக்கு இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யும் என மழைக்கான ஆரஞ்சு எச்ச ரிக்கையும், கோவை, இராமநாதபுரம், சேலம், தருமபுரி, கள்ளக்குறிச்சியில் இடி மின்னலுடன் லேசான மழை பெய்வ தற்கானஎன மஞ்சள் அலர்ட் விடப்பட் டுள்ளது.
மேலும், பொதுவாக அடுத்த 7 நாட்க ளுக்கு தமிழகத்தில் மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதனிடையே, நீலகிரி மாவட்டம் உதகையில் சுமார் ஒரு மணி நேரத் திற்கும் மேலாக கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
மோடியிடம் விளக்கம் கேட்கக் கூட தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது!
திருமாவளவன் குற்றச்சாட்டு
அரியலூர், மே 5- “பிரதமர் நரேந்திர மோடியிடம் விளக்கம் கேட்பதற்கு கூட தேர் தல் ஆணையம் அஞ்சு கிறது” என்று விசிக தலைவரும், சிதம்ப ரம் தொகுதி வேட்பாள ருமான தொல்.திருமாவளவன் தெரி வித்தார்.
இதுதொடர்பாக அரியலூரில் அவர் பேட்டியளித்துள்ளார். அதில், “இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள், அதிர்ச்சியளிக்கும் வகையில், ஒரு சார்பாக, பாஜகவுக்கு சாதகமாக உள்ளன. தேர்தல் பரப்புரை விவகாரங்களில், யார் மீது குற்றம் சுமத் தப்படுகிறதோ அவருக்கு விளக்கம் கேட்டு அறிக்கை அனுப்ப வேண்டும். அப் படி பிரதமர் நரேந்திர மோடிக்கு விளக்கம் கேட்டு அறிக்கை அனுப்ப வேண்டிய தேர்தல் ஆணையம், மாறாக, பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டாவுக்கு அனுப்பியது ஏன்? என விளங்கவில்லை. பிரதமர் நரேந்திர மோடியிடம் விளக்கம் கேட்பதற்கு கூட தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
மதுரை காமராசர் பல்கலை., துணைவேந்தரின் ராஜினாமா ஏற்பு
மதுரை, மே 5- ஜே.குமார் கடந்த 2022-ஆம் ஆண்டு ஏப்.1-ஆம் தேதி காமராசர் பல்கலைக் கழக துணைவேந்தராகப் பொறுப் பேற்றார். அவரது பதவிக்காலம் இன்னும் ஓராண்டு உள்ள நிலையில், அவர் தம்மை துணைவேந்தர் பதவியில் இருந்து விடுவிக்க வலியுறுத்தி கடந்த ஏப்ரல் 30 அன்று கோரிக்கை விடுத்திருந்தார். இந்த நிலையில் துணைவேந்தரின் ராஜி னாமாவை ஏற்றுக்கொண்டதாக, பல்க லையின் நம்பகமான வட்டாரங்கள் தெரி வித்துள்ளன.
இதையடுத்து மே 10-ஆம் தேதிக்குள் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடி வெடுப்பதற்காக காமராசர் பல்கலை., கூட்டத்தை கூட்ட வேண்டும். தமிழக கல்வித்துறை செயலரும் இது குறித்து பல்கலைக் கழக உயரதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளதாக என பல்கலை., வட்டாரங்கள் தெரிவித்தன.
துணைவேந்தர் இல்லாத பட்சத்தில், தமிழக உயர்கல்வித்துறை செயலர் தலைமையில், மூன்று சிண்டிகேட் உறுப்பினர்களைக் கொண்ட, ‘கன்வீனர் கமிட்டி’-யை பல்கலைக் கழகம் அமைக் கும்.