tamilnadu

குட்கா ஊழல்; அதிமுகவினரை பாதுகாக்கும் ஒன்றிய அரசு

சென்னை, மார்ச் 6 - தமிழ்நாட்டில் புகையிலைப் பொருட்களுக்கு கடந்த 2015-இல்  தடை விதிக்கப்பட்டது. எனினும் தடையை மீறி பல இடங்களில்  குட்கா விற்பனை செய்யப்படுவ தாக புகார் எழுந்தது. இதனிடை யே, ரூ. 250 கோடி வரி ஏய்ப்பு  தொடர்பாக 2016-ஆம் ஆண்டு செங்  குன்றம் பகுதியில் மாதவராவ் என்ப வருக்கு சொந்தமான குட்கா கிடங் கில், வருமான வரித் துறையினர் சோதனை நடத்தியபோது, லஞ்  சம் கொடுக்கப்பட்டதாக ஒரு டைரி யையும் பறிமுதல் செய்தனர்.

அதன்  படி அப்போதைய தமிழக சுகாதா ரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்,  முன்னாள் டிஜிபி டி.கே. ராஜேந்தி ரன், சென்னை முன்னாள் காவல்  ஆணையர் ஜார்ஜ் உள்ளிட்ட பல ருக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. குட்கா ஊழல் தொடர்பாக திமுக தரப்பில் தொடரப்பட்ட வழக்கை  விசாரித்த சென்னை உயர் நீதி மன்றம், இந்த வழக்கின் விசாரணை யை சிபிஐ-க்கு மாற்றி உத்தர விட்டது.  அதனடிப்படையில், சிபிஐ போலீசார் சென்னை சிபிஐ நீதி மன்றத்தில் கடந்த 2022-இல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த னர்.

அதில் கைது செய்யப்பட்ட மாதவராவ் உள்ளிட்ட 6 பெயர்கள் மட்டுமே இடம்பெற்றிருந்தது. அமைச்சர் மற்றும் டிஜிபி என  வேறு யாருடைய பெயர்களும் இடம்பெறவில்லை. இவ்வாறு குற்றப்பத்திரிகை முழுமையாக இல்லை என்பதால், பிழையை சரி  செய்ய சிபிஐயிடமே நீதிமன்றம் திரும்ப அளித்தது. தமிழக அரசின் தொடர் நடவ டிக்கை காரணமாக, குட்கா வழக்  கில் முன்னாள் அமைச்சர்கள், உயர்  அதிகாரிகளுக்கு எதிராக விசார ணைக்கு நடத்த கடந்த மாதம் ஆளு நர் ஆர்.என். ரவி வேண்டா வெறுப்  பாக ஒப்புதல் அளித்தார்.

எனினும்,  சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை. இந்நிலையில், இந்த வழக்கு புதனன்று மீண்டும் சென்னை சிபிஐ  நிறப்பு நீதிமன்ற நீதிபதி மலர்  வாலண்டினா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, குற்றம் சாட் டப்பட்ட இருவருக்கு எதிரான கூடு தல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய ஒன்றிய அரசு அனுமதி தர வில்லை என்றும் கால அவகாசம் கோரியும் சிபிஐ தரப்பில் தெரிவிக்  கப்பட்டது.

இதனால் நீதிபதி அதிருப்தி அடைந்தார். ஒன்றிய அரசு அனுமதி அளிக்க வில்லை என்ற ஒரே காரணத்தையே எத்தனை நாளைக்கு கூறுவீர்கள் என்று கேள்வி எழுப்பிய நீதிபதி,  இந்த வழக்கில் விசாரணை அதி காரி விசாரணையின் நிலை என்ன  என்பது குறித்து நேரில் ஆஜராகி  பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.