tamilnadu

img

ஜிஎஸ்டி வரி விதிப்பு எதிரொலி: தயிர், நெய் விலையை உயர்த்திய ஆவின்!

தயிர், நெய் விலையை உயர்த்தி ஆவின் நிறுவனம் உத்தரவிட்டுள்ளது.

பால் பொருள்களுக்கு ஒன்றிய பாஜக அரசு 5% ஜிஎஸ்டி வரி விதித்திருப்பதால், தயிர், நெய், லஸ்சி, மோர் ஆகிய பொருட்களின் விலையை ஆவின் நிறுவனம் உயர்த்தியுள்ளது.

அதன்படி, ஆவின் நெய் லிட்டருக்கு ரூ.45 உயர்த்தப்பட்டு இன்று முதல் ரூ.580 ஆகவும், 500 மி.லி ஆவின் தயிர் விலை ரூ.30லிருந்து ரூ.35 ஆகவும், பிரிமியம் தயிர் ஒரு கிலோ ரூ.100லிருந்து ரூ.120 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

200 மி.லி லஸ்சி ரூ.20, புரோபயோடிக் லஸ்சி ரூ.27லிருந்து ரூ.30 ஆகவும், 200 மி.லி மோர் ரூ.15லிருந்து ரூ.18 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

;