tamilnadu

img

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு தேதி அறிவிப்பு  

டிஎன்பிஸ்சி குரூப் 4 தேர்வுக்கு நாளை மார்ச் 30 முதல் ஏப்ரல் 28 ஆம் தேதிவரை விண்ணப்பிக்கலாம் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.  

இதுகுறித்து சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் கூறுகையில், தமிழகத்தில் காலியாக இருக்கும் 7382 பணியிடங்களுக்கான குரூப் 4 தேர்வு ஜூலை 24 ஆம் தேதி காலை 9.30 முதல் 12.30 மணி வரை மொத்தம் 3 மணி நேரம் நடைபெறும். இந்த தேர்வுக்கு மார்ச் 30 ஆம் தேதி முதல் ஏப்ரல் 28 ஆம் தேதிவரை விண்ணப்பிக்கலாம்.  

இதில் 81 பணியிடங்கள் விளையாட்டு கோட்டா மூலம் நிரப்பப்படும். இந்த தேர்வில் மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு 200 கேள்விகள் கேட்கப்படும். 100 கேள்விகள் தமிழ் மொழி தொடர்பானதாகவும், 75 கேள்விகள் பொது அறிவு தொடர்புடையதாகவும் இருக்கும். 90 மதிப்பெண்களுக்கு மேல் பெறுபவர்களின் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும்.

இதற்கான முடிவுகள் அக்டோபர் மாதம் வெளியிடப்படும். மேலும் 274 கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களும் இதில் அடங்கும் என்றும் தெரிவித்துள்ளார். 

;