சென்னை, மே 7 - மரங்களை பாதுகாக்க, நிபுணர்கள் அடங்கிய மாநில பசுமைக்குழு அமைக்கப் பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத் தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் மரங்களை பாது காக்க நிபுணர்கள் அடங்கிய குழுவை அமைக்க கோரி ராதாகிருஷ்ணன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந் திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் ராஜா, சவுந்தர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மரங்களை பாதுகாக்க மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் பசுமைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறி, அதற்கான அரசாணையை அரசுத் தரப்பு வழக்கறிஞர் தாக்கல் செய்தார். மாவட்ட அளவிலான குழுவில் சுற்றுச்சூழல் நிபுணர்கள் இடம்பெற்றுள்ள னர். ஆனால் மாநில அளவிலான குழுவில் எந்த நிபுணர்களும் இடம் பெறவில்லை. மாநில அளவிலான குழுவுக்கு தலைமைச் செயலாளர் தலைமை வகிக்க வேண்டும் எனவும் மனுதாரர் தரப்பில் வலியுறுத்தப் பட்டது. இதுகுறித்து அரசின் கருத்தை தெரிவிக்க நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். இந்த வழக்கு மீண்டும் விசார ணைக்கு வந்தபோது, மாவட்ட அளவிலான குழுவில் உள்ளது போல், மாநில அளவிலான குழுவில் இரு நிபுணர்கள் சேர்க்கப்பட்டுள்ள தாக கூறி, அதுசம்பந்தமான அரசா ணையை அரசுத்தரப்பில் தாக்கல் செய்யப் பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர்.