tamilnadu

கிராம அஞ்சல் ஊழியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

சென்னை:
தமிழக அஞ்சல் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.தமிழ்நாடு அஞ்சல் துறையில் 3,162 கிராம அஞ்சல் ஊழியர்கள் நியமிக்கப் பட உள்ளனர். கல்வித்தகுதியாக 10 ஆம் வகுப்பு தேர்ச்சியோடு கணினி பயிற்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.வயது வரம்பு 18-லிருந்து 40-க்குள் இருக்க வேண்டும். சம்பளம் ரூபாய் 10,000 முதல் 14,500 வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.பணியிடம் தமிழகம் முழுவதும் எந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி விண்ணப்பிக்கலாம். பெரும்பாலும் அதே மாவட்டத்தில் அவர் களுக்கு பணி கிடைக்க ஏராளமான வாய்ப்புகள் உள்ளது. இதற்கான விண் ணப்ப கட்டணம் ரூபாய் 100 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இப்பதவிக்கு விண்ணப்பிக்க வரும் 30 ஆம் தேதி கடைசி நாளாகும். கூடுதல் விவரங்களுக்கு https://appost.in/gdsonline/ என்ற இணையதளத்தில் அறிந்து கொள் ளலாம் என்று அஞ்சல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

;