சென்னை, மார்ச் 14- பொன்முடி எம்எல்ஏ-வாக நீடிக்கும் நிலையில், அவருக்கு மார்ச் 13ஆம் தேதி மாலை அல்லது 14-ஆம் தேதி காலையில் அமைச்ச ராக பதவிப் பிரமாணம் செய்து வைக்குமாறு, ஆளு நர் ஆர்.என். ரவிக்கு தமிழ் நாடு அரசு சார்பில் முதல்வர் மு.க. ஸ்டாலின் புதனன்று (மார்ச் 13) கடிதம் எழுதினார்.
இக்கடிதத்தை ஆளுநர் பரிசீலித்து, அதன் பிறகு பதவியேற்பு குறித்த அறிவிப்பை வெளியிடு வார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், திருப்பூர் சென்றிருந்த ஆளுநர் ஆர்.என்.ரவி சென்னை திரும்பியவுடன், வியாழ னன்று (மார்ச் 14) காலை 5.50 மணிக்கு அவசர அவசரமாக தில்லி புறப்பட்டுச் சென்றுள்ளார். 16-ஆம் தேதிதான் தமிழ்நாடு திரும்பும் வகையில் அவரது பயணம் திட்டமிடப்பட்டு உள்ளது.
ஆளுநரின் இந்த பயணத்தால், பொன்முடி அமைச்சராகும் தேதி தள்ளிப்போகலாம்; பொன் முடி அமைச்சராக பதவியேற்பதைத் தள்ளிப்போடு வதற்காகவே இந்தப் பயணம் என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஏனெனில், மார்ச் 16-ஆம் தேதிக்கு முன்பதாக தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டால், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்து விடும். அவ்வாறு தேர்தல் விதிமுறைகள் நடை முறையில் இருக்கும் காலகட்டத்தில், பொன் முடிக்கு ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைப் பாரா? என்ற சந்தேகமும், கேள்வியும் எழுந்துள்ளது.