சென்னை,ஆக.02- ஜூலை 7 ஆம் தேதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்களின் ஒரு நாள் சம்பளத்தைப் பிடிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் அரசு உத்தரவை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு, ஜூலை 7ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்திய சத்துணவு ஊழியர்களின் ஒரு நாள் சம்பளத்தை பிடிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து சம்பளப் பிடித்தம் தொடர்பான சமூக நலத்துறை ஆணையரின் உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என்று தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. விடுமுறை நாளில் ஆர்ப்பாட்டம் நடத்தியதில் தவறில்லை என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.