சென்னை,ஆக.29-
தமிழ் அறிஞர்கள் விருதுக்கு தகுதி யான 75 நபர்களுக்கு மாநில அரசு அழைப்பு விடுத்துள்ளது. இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப் பில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழுக்கும், தமிழ்மொழி, பண்பாட்டு வளர்ச்சிக்கு தொண்டாற்று வோருக்கு தமிழ்நாடு அரசு பல்வேறு விருதுகளையும் சிறப்புகளையும் அளித்து வருகிறது. அந்தவகையில் 2024-ஆம் ஆண்டுக்கான திருவள்ளு வர் விருதுக்கும், 2023-ஆம் ஆண்டுக் கான 74 விருதுகளுக்கும் தகுதியான வர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதன்படி, திருவள்ளுவர் நாள் விருதுகள் அடிப்படையில் திருவள்ளு வர் விருது, பாரதியார் விருது, பாரதி தாசன் விருது, திரு.வி.க. விருது, கி.ஆ.பெ.விசுவநாதம் விருது, காமராஜர் விருது, அண்ணா விருது பெறுவோருக்கு (தலா ஒருவருக்கு) ரூ.2 லட்சம், ஒரு சவரன் தங்க பதக்கம், தகுதியுரை, பொன்னாடை வழங்கப்படு கின்றன.
இலக்கிய மாமணி (3 பேருக்கு) விருது பெறுவோருக்கு ரூ.5 லட்சத்து டன் ஒரு சவரன் தங்க பதக்கம், தகுதி யுரை, பொன்னாடை வழங்கப்படு கின்றன.
தமிழ் வளர்ச்சி துறை விருது கள் அடிப்படையில் தமிழ்த்தாய் விருது பெறுவோருக்கு ரூ.5 லட்சத்து டன் கேடயமும், தகுதியுரையும் வழங்கப்படுகிறது. கபிலர் விருது, உ.வே.சா. விருது, கம்பன் விருது, சொல்லின் செல்வர் விருது, உமறு புலவர் விருது, ஜி.யு.போப் விருது, இளங்கோவடிகள் விருது, அம்மா இலக்கிய விருது, மொழி பெயர்ப்பாளர் விருது (10), சிந்தனை சிற்பி சிங்காரவேலர் விருது, அயோத்திதாச பண்டிதர் விருது, மறை மலையடிகளார் விருது, வள்ளலார் விருது, காரைக்கால் அம்மையார் விருது பெறுவோருக்கு (தலா ஒரு நபருக்கு) ரூ.2 லட்சத்துடன், தங்க பதக்கம், தகுதியுரை மற்றும் பொன்னாடை வழங்கப்படுகிறது.
தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் விருது 3 பேருக்கு வழங்கப்படுகிறது. அவர்களுக்கு தலா ரூ.2 லட்சத் துடன் கேடயம், தகுதியுரை, பொன் னாடை வழங்கப்படுகிறது. 38 பேருக்கு (மாவட்டந்தோறும் ஒரு வருக்கு) தமிழ் செம்மல் விருது வழங்கப் படுகிறது. அவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் மற்றும் தகுதியுரை வழங்கப்படுகின்றன.
அந்தவகையில் 75 பேருக்கு விருது அளிக்கப்பட இருக்கிறது.எனவே தகுதிவாய்ந்த தமிழ் அறிஞர்கள் http://awards.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலமாகவோ அல்லது ‘தமிழ் வளர்ச்சி இயக்குநர், தமிழ் வளர்ச்சி இயக்ககம், தமிழ்ச் சாலை, எழும்பூர், சென்னை - 600 008’ என்ற முகவரிக்கு தபால் மூலமாக அக்டோபர் 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டு கின்றோம். உரிய ஆவணங்களோடு விண்ணப்பங்கள் அனுப்பப்பட வேண்டும்.
மேற்கண்ட இணையதளத்தி லேயே போதுமான விளக்கங்கள் தரப்பட்டுள்ளன.கூடுதல் விவரங்க ளுக்கு 044- 28190412, 28190413 ஆகிய தொலைபேசி எண்களை அலுவலக நேரத்தில் தொடர்பு கொள்ளலாம். அக்டோபர் 15 ஆம் தேதிக்குள் பெறப் படும் விண்ணப்பங்களே ஏற்றுக் கொள்ளப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.