பிஆர்டிசி ஒப்பந்த ஊழியர்கள் வேலைநிறுத்தம் முதல்வர் தலையிட அரசு ஊழியர் சம்மேளனம் வலியுறுத்தல்'
பிஆர்டிசி ஒப்பந்த ஊழியர்களின் வேலைநிறுத்தம் போராட்டம் முடிவுக்கு வர முதல்வர் தலையிட வேண்டும் என்றுஅரசு ஊழியர் சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து புதுச்சேரி அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளனத் தின் கவுரவத் தலைவர் பிரேமதாசன், தலைவர் ராதாகிருஷ்ணன், பொது ச்செயலாளர் முனுசாமி, பிஆர்டிசி ஊழியர் சங்க தலைவர் வேளையன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர் களிடம் கூறியதாவது:- புதுச்சேரி சாலை போக்குவரத்து கழகத்தில் கடந்த 2015ஆம் ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநர் கள் மற்றும் நடத்துநர்கள் அரசின் திட்டத்திற்கு ஏற்ப நியமிக்கப்பட்டு, 10 ஆண்டுகளாக சொற்ப ஊதியத் தில் பணி செய்து வருபவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற ஊழியர்களின் வாழ்வாதாரக் கோரிக்கை நீண்டகாலமாக நிறை வேற்றப்படாமல் இழுத்தடிக்கப் பட்டு வருகிறது. குறிப்பாக பணி நிரந்தரம் கோரிக் கையை வலியுறுத்தி அரசு ஊழியர் சம்மேளனத்தின் வழிகாட்டுதலோடு பல போராட்டங்கள் நடைபெற்றா லும், போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில், பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு. அக்கோரிக் கையை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டாலும் கிட்ட த்தட்ட 7 ஆண்டுகளாக கோரிக்கை கள் நிறைவேற்றப்படாமல் இழுத் தடிக்கப்பட்டு வருவது பிஆர்டிசி நிர்வாகத்தின் செயலற்ற தன்மையை வெளிப்படுத்துகிறது. கடந்த 2021ஆம் ஆண்டு நடந்த போராட்டத்தின் போது, அப் போதைய மேலாண் இயக்குனர், புதுச்சேரி சாலை போக்குவரத்து கழ கத்தின் நியமன விதிப்படி 3 ஆண்டு கள் வேலை செய்த தினக்கூலி ஊழி யர்களை மட்டும் தான் பணி நிரந்த ரம் செய்ய முடியும் என்று தெரிவித் தார். மேலும் ஒப்பந்த ஊழியர்களை நேரடியாக பணி நிரந்தரம் செய்ய முடியாது என்றும், ஆகையால் உங்கள் அனைவரையும் தினக்கூலி ஊழியர்களாக மாற்றி உத்தரவு வழங்கி நடவடிக்கை எடுக்கப்படும் என்று வாக்குறுதி அளித்தார். மேலாண் இயக்குநர் பணி இட மாற்றத்தில் சென்றபின் அவர் அளித்த அந்த வாக்குறுதியும் இதுவரை நிறைவேற்றப்பட வில்லை. அதைத் தொடர்ந்து ஒப்பந்த ஊழி யர்கள், கடந்த 2024ஆம் ஆண்டு பல கட்ட போராட்டத்தின் தொடர்ச்சி யாக உண்ணாநிலை போராட்டம் நடைபெற்றது. சம்மேளன பொறுப் பாளர்கள் உடன் முன்னாள் பொது மேலாளர்(நிர்வாகம்) கலிய பெருமாள் பேச்சுவார்த்தை நடத்தி னார். அப்போது பிரச்சனைகளை கருத்தில் கொண்டு ஒப்பந்த ஊழி யர்களை பணி நிரந்தரம் செய்வதற் கான தீர்மானத்தை, புதுச்சேரி சாலை போக்குவரத்து கழகத்தின் பேரவை யில் தீர்மானம் நிறைவேற்றினர். அதற்கு துணைநிலை ஆளுநரின் ஒப்புதல் பெற்று அனைத்து ஒப்பந்த ஊழியர்களும் கடந்த ஜனவரி மாதம் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று வாக்குறுதி அளித்தார். மேற்கண்ட பொது மேலாளரின் வாக்குறுதி குறித்து அரசு ஊழியர் சம்மேளனம், ஊழியர்கள் சங்கம் மற்றும் பிஆர்டிசி தினக்கூலி மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் சங்கம் ஆகிய வற்றின் நிர்வாகிகள் பிஆர்டிசி மேலாண் இயக்குநரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். 2025 பொங்கல் பண்டிகைக் குள் பணி நிரந்தரம் கோரிக் கையை நிறைவேற்றித் தருவதாக வாக்குறுதி அளித்தார். ஆனால், 4 மாதம் கடந்தும் கோரிக்கை நிறைவேற்ற வில்லை. தற்போது பிஆர்டிசி யின் அனைத்து ஒப்பந்த ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் ஒன்றி ணைந்து எதிர்வரும் 9.4.2025 முதல் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ள னர். ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு கடந்த 10.3.2025 அன்று அறிவிப்பு செய்துள்ள நிலை யில், நிர்வாகம் இதுவரை ஊழியர் அமைப்புகளை அழைத்து பேசி, வேலை நிறுத்தத்தை தவிர்க்க தக்க நடவடிக்கை எடுக்காமல் இருப்பது கண்டனத்துக்குரியது. இது ஊழியர் களை நிர்வாகமே வேலை நிறுத்த த்திற்கு தூண்டுவது போல் உள்ளது. எனவே, முதல்வர் ரங்கசாமி இப்பிரச்சனையில் தலையிட்டு, ஒப்பந்த ஊழியர்களின் முக்கிய கோரிக்கையான பணி நிரந்தரம் கோரிக்கையை நிறைவேற்றி வேலை நிறுத்தப் போராட்டத்தை தவிர்க்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கி றோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்த னர்.