tamilnadu

ஓய்வுபெறும் நாளில் அரசு ஊழியர் மாநிலத் தலைவர் ‘சஸ்பெண்ட்’ ஓய்வூதியர்கள் சங்கம் கண்டனம்

சென்னை, ஜூன் 1-தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத் தலைவர் மு.சுப்பிரமணியன் பணி ஓய்வு நாளன்று தற்காலிக நீக்கம் செய்யப்பட்டதற்குத் தமிழ்நாடு அரசு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து சங்கத்தின் தலைவர் நெ.இல.சீதரன், பொதுச் செயலாளர் பி.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநிலத் தலைவரும், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாநில தலைவருமான மு.சுப்ரமணியன் பணி ஓய்வு பெறும் நாளன்று தற்காலிக நீக்கம் செய் யப்பட்டுள்ளார். இதை வன்மையாகக் கண்டிக்கிறோம். இதுபோன்ற பழிவாங்கும் நடவடிக்கை தொடர்ந்து நடைபெறுகிறது.2004, 2019 ஆம் ஆண்டுகளில் நடந்த சம்பவங்களில் பாடம் கற்காத மாநில அரசு, ஊழியர்களிடம் மோதல் போக்கையே கடைப் பிடிக்கின்றது. அரசின் பழிவாங்கும் நடவடிக்கையை எதிர்த்து ஜூன் 3 அன்று ஜாக்டோ-ஜியோ நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் ஓய்வூதியர் களும் திரளாகக் கலந்து கொள் வார்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.