செங்கல்பட்டு, ஏப். 21- செங்கல்பட்டு ராஜேஸ்வரி வேதாச்சலம் அரசு கலைக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா சனிக்கிழமை (ஏப்,21) நடைபெற்றது. இதில் கல்லூரி கல்வி இணை இயக்குனர் கலந்து கொண்டு இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் மு.தமிழ்பாரதி உள்ளிட்ட 850 மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். விழாவுக்கு ராஜேஸ்வரி வேதாச்சலம் அரசு கலைக் கல்லூரியின் முதல்வர் சிதம்பர விநாயகம் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக கல்லூரி கல்வி இணை இயக்குனர் காவேரியம்மாள், உத்திரமேரூர் அரசு கலைக் கல்லூரி முதல்வர் பத்மினி ஆகியோர் கலந்து கொண்டு இயற்பியல், வேதியியல், வரலாறு, தமிழ், ஆங்கிலம், வணிகவியல், கணினி அறிவியல் உள்ளிட்ட 12 துறைகளைச் சார்ந்த 850 மாணவ மாணவி களுக்கு பட்டங்களை வழங்கி பேசினர். இதில் கல்லூரி துறைத்தலைவர்கள் ராஜராஜன், ஜெயக்குமார், ரமேஷ் பாபு, ரெமா, பேராசிரியர்கள், கவுரவ விரிவுரையாளர்கள் மாணவ மாணவிகள் பெற்றோர் உட்பட பலர் கலந்து கொண்டனர். இவ்விழா வில் இந்திய மாணவர் சங்கத்தின் செங்கல்பட்டு மாவட்டச் செயலாளர் மு.தமிழ்பாரதி இளங்கலை வரலாற்றுக் கான பட்டத்தை பெற்றுக்கொண்டார். தற்போது அவர் முது கலை வரலாறு அதே கல்லூரியில் பயின்று வருவது குறிப்பிடத்தக்கது.