tamilnadu

விமான நிலையத்தில் ரூ.82 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்

ஆலந்தூர்,பிப்.29- சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலை யத்துக்கு கொழும்பிலிருந்து விமானம் வந்தது. அதில் வந்த புதுக்கோட்டையைச் சேர்ந்த அகமதுகனி (32), சென்னையைச் சேர்ந்த தமீம் அன்சாரி (20), மதுரையைச் சேர்ந்த ரகுமான்கான் (22) ஆகிய 3 பேரை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர். அப் போது 3 பேரும் உள்ளாடைக் குள் 766 கிராம் தங்கத்தை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.33 லட்சத்து 63 ஆயிர மாகும். அதேபோல் கொழும்பி லிருந்து வந்த மற்றொரு விமானத்தில் பயணம் செய்த இலங்கையைச் சேர்ந்த முகமது நஸ்லீன்(20), ராமநாதபுரத்தைச் சேர்ந்த அப்துல்லா(38) ஆகிய 2 பேர் வந்தனர். இவர்களிடம் இருந்து ரூ.25 லட்சத்து 40 ஆயிரம் மதிப்புள்ள 577  கிராம் தங்கத்தை அதிகாரி கள் கைப்பற்றினர். மேலும் கொழும்பில் இருந்து விமானத்தில் வந்த சென்னையைச் சேர்ந்த சுல்பீகர் அலி (37) என்பவரி டம் இருந்து ரூ.12 லட்சத்து 82 ஆயிரம் மதிப்புள்ள 292 கிராம் தங்கத்தையும் பறி முதல் செய்தனர். சென்னை விமான நிலையத்தில் 6 பேரிடம் இருந்து ரூ.71 லட்சத்து 85 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 635 கிராம் தங்கத்தை பறி முதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இவர்கள் யாருக்காக தங்கத்தை கடத்தி வந்தனர் என விசா ரணை நடத்தி வருகின்றனர்.

;