கோத்ரெஜ் நிறுவனம் ரூ. 5 கோடி நிவாரணம்
சென்னையில் துவங்கியுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்ற கோத்ரெஜ் நிறுவனத்தின் தலை வர் நிஷாபா, மிக்ஜம் புயல் பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.5 கோடிக்கான காசோலையை வழங்கினார்.
‘சந்திரயான் வெற்றி அனைவருக்குமானது’
சந்திரயான் வெற்றி அனைவருக்கு மானது என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன (இஸ்ரோ) தலைவர் சோம்நாத் கூறினார். சென்னையில் ஞாயி றன்று தமிழக அரசு நடத்திய உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் அவர் பேசுகை யில், ராக்கெட் கட்டுமானம் என்பது பெரிய அளவில் லாபம் தராது. இந்தியா தான் குறைவான விலையில் ராக்கெட்டை விண்ணுக்குச் செலுத்துகிறது. வன்பொருள் பயன்பாட்டைக் குறைப்பதே நமது வெற்றிக்குக் காரணம் சந்திரயான் 3 திட்டம் மக்களின் இதயங்களில் உள்ளது; சந்திர யான் வெற்றி அனைவருக்குமானது. 2025இல் இந்தியர்கள் விண்வெளியில் பறப்பார்கள் என்று தெரிவித்தார்.
ஒரே நாளில் 105 மி.மீ மழை
சிவகாசி மற்றும் சுற்று வட்டாரப் பகுதி களில் சனிக்கிழமையன்று இரவு முதல் விடிய விடிய மழை பெய்தது. இதன் மொத்த அளவு 105.மி.மீ என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தொடர் மழை காரணமாக சிவகாசி அருகே செங்கமல நாச்சியார்புரம் ஊராட்சிக்குட்பட்ட கங்கா குளம் கண்மாய் முழுவதுமாக நிரம்பியது. எனவே, பாதுகாப்பு கருதி கண்மாயின் ஒரு பகுதியில் இருந்து திறந்து விடப்பட்ட மழை நீரானது வெள்ளம் போல பெருக்கெடுத்து சாலையில் ஓடியது.