சென்னை:
மாநில பொதுத்துறை நிறுவன தொழிலாளர்களுக்கு கூடுதல் போனஸ் வழங்க அரசுக்கு சிஐடியு தமிழ்நாடு மாநிலக்குழு வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து சிஐடியு மாநிலப் பொதுச்செயலாளர் ஜி.சுகுமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சிஐடியு தமிழ்நாடு மாநில நிர்வாகக்குழு கூட்டம் நவம்பர் 2,3 ஆகிய தேதிகளில் மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பொதுச்செயலாளர் ஜி.சுகுமாறன், உதவி பொதுச்செயலாளர்கள் வி.குமார், கே.திருச்செல்வன், எஸ்.கண்ணன் உட்பட மாநில நிர்வாகிகள், நிர்வாகக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன.தமிழக அரசுக்கு சொந்தமான போக்குவரத்து, மின்சாரம், நுகர்பொருள் வாணிபக் கழகம், தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம், குடிநீர் வடிகால்வாரியம் உள்ளிட்ட பொதுத்துறைநிறுவனங்களில் பணிபுரியும்தொழிலா ளர்களுக்கு 2019-20 ஆம் ஆண்டுக்கானபோனஸ் மற்றும் கருணைத்தொகை யாக 10 சதவீதம் வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது ஏற்புடையதல்ல.கொரோனா ஊரடங்கினால் மாநில பொதுத்துறை நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளதும், அதனால் வருமானம் மிகவும் குறைந்துள்ளதை அரசு சுட்டிக்காட்டியுள்ளது. அரசு போக்குவரத்து, மின்சாரம், நுகர்பொருள் வாணிபக் கழகம், ஆவின் போன்ற நிறுவனங்கள் மக்களின் தேவைகளை பூர்த்திசெய்யும் சேவை நிறுவனங்களாகும். இந்த நிறுவனங்களுக்கு போனஸ் வழங்குவதில் லாப -நட்ட கணக்கு பார்க்கக்கூடாது. ஆனால் அரசு 10 சதவீதமாக குறைத்துவழங்க முடிவு செய்துள்ளது எந்தவிதத்திலும் நியாயப்படுத்த முடியாததாகும். அரசு அறிவிப்பில் கூட்டுறவு,டாஸ்மாக், அரசு ரப்பர் கழகம், அரசுதேயிலை தோட்டம், பூம்புகார் உள்ளிட்ட நிறுவனங்கள் இடம்பெறவில்லை.கொரோனா நோய் பரவல் மற்றும்ஊரடங்கு என்பது 2020 மார்ச் மாதஇறுதியில் தான். ஆனால் போனஸ் என்பது 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2020ம் ஆண்டு மார்ச் மாதம் முடிய உள்ள ஓராண்டு காலத்திற்கானது.
20 சதவீத போனஸ் வழங்குக!
தொழிற்சங்கங்கள் 2019-20 ஆம்ஆண்டுக்கான போனஸ் கோரிக்கையினை சம்பந்தப்பட்ட நிர்வாகங்களுக்கு அனுப்பி வைத்துள்ளன. ஆனால் நிர்வாகங்கள், தொழிற்சங்கங்களை அழைத்துப் பேசி நிதி ஆண்டறிக்கை, போனஸ் கணக்கீடு அடிப்படையில் பேச்சுவார்த்தை மூலம் சுமூக தீர்வு ஏற்படுத்துவதற்கு மாறாக, கடந்த 9 ஆண்டுகளாக தன்னிச்சையாக போனஸ் அறிவிக்கும் அணுகுமுறையை அரசு பின்பற்றி வருவது கூட்டுபேர உரிமைக்கு எதிரானதாகும்.தமிழக அரசு கடந்த ஆண்டு வழங்கியுள்ளதை போன்று அனைத்து மாநிலபொதுத்துறை நிறுவன தொழி லாளர்களுக்கும் 20 சதவீத போனஸ் வழங்க வேண்டும் என்று சிஐடியு தமிழ்நாடு மாநிலக்குழு வலியுறுத்துகிறது.
ராஜஸ்தான் அரசுக்கு கோரிக்கை
கொரோனா தொற்றைக் காரணம் காட்டி ராஜஸ்தான் மாநில அரசு பட்டாசுவெடிக்கவும், விற்கவும் தடை விதித்துள்ளது. இந்த நடவடிக்கை லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வா தாரத்தை பாதிக்கக்கூடியதாகும், பட்டாசு விற்பனை என்பது தீபாவளிப் பண்டிகையை யொட்டி பெருமளவில் இருக்கும். கொரோனா ஊரடங்கினால் கடந்த 6 மாத காலமாக பட்டாசு உற்பத்திகடுமையாக பாதித்து தொழிலாளர்கள் வேலையில்லாமல் வருமானத்தை இழந்துள்ள நிலையில் தீபாவளியை யொட்டி உற்பத்தி துவங்கப்பட்டு தொழிலாளர்களுக்கு வருமானம் கிடைக்கும் நிலையில் ராஜஸ்தான் அரசு இத்தகைய தடை விதித்துள்ளது பொருத்தமற்றது. இத்தகைய தடை வட மாநிலங்களில் விதிக்கப்படுகிற நிலைஉருவாகக்கூடாது. பட்டாசுத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில்கொண்டு பட்டாசு வெடிக்க விதித்திருக்கும் தடையை ராஜஸ்தான் அரசு திரும்பப்பெற வேண்டும் என்று சிஐடியு தமிழ்நாடு மாநிலக்குழு வலியுறுத்துகிறது,