புதுச்சேரி, ஜூலை 2- ஒப்பந்த ஊழியர்களுக்கு நான்கு மாதங்களாக ஊதி யம் வழங்காத பிஎஸ்என்எல் நிர்வாகத்தை கண்டித்து புதுச்சேரியில் தொடர் உண்ணாநிலைப் போராட்டம் துவங்கியது. பிஎஸ்என்எல் நிறுவ னத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கு கடந்த நான்கு மாதங்களாக வழங்க வேண்டிய ஊதியத்தை உடனடியாக வழங்கக்கோரி தலைமை பொதுமேலாளர் அலுவலகம் அருகே ஊழி யர் சங்க மாவட்டத் தலைவர் சங்கரன், ஒப்பந்த ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலை வர் குமார் தலைமையில் உண்ணாநிலைப் போராட் டம் செவ்வாயன்று (ஜூலை 2) துவங்கியது. போராட்டத்தை மாவட்ட உதவித் தலைவர் கொளஞ் சியப்பன் துவக்கிவைத்து பேசினார். சங்க நிர்வாகிகள் சுப்பிரமணியன், செல்வம், ஓய்வூதியர் சங்க நிர்வாகிகள் ராமகிருஷ்ணன், சக்திவேல் உட்பட திரளானோர் பங் கேற்றனர். இந்த உண்ணா நிலை போராட்டம் தொடர்ந்து 3 நாட்கள் நடைபெறவுள்ளது.