tamilnadu

img

கொடுங்கையூர் குப்பை மேட்டை அகற்றுக

சென்னை,ஜூலை 14-  தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் வடசென்னை மாவட்ட முதல் மாநாடு சென்னை பெரம்பூரில் உள்ள பெண்கள் மேல்நிலை ப்பள்ளியில் ஞாயிறன்று (ஜூலை 14)  நடைபெற்றது. இதில் தமிழ்நாடு அறி வியல் இயக்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் செந்தமிழ்ச்செல்வன் புதிய கல்விக் கொள்கை குறித்து உரையாற்றினார் . அதனைத் தொடர்ந்து மாவட்டச் செயலாளர் காஞ்சனா வட சென்னையில் தமிழ்நாடு அறிவியல் இயக்கச் செயல்பாடுகள் குறித்து அறிக்கை முன்மொழிந்தார். அறிக்கையின் மீது விவாதம் நடைபெற்றது. வடசென்னையில் உள்ள கொடுங்கையூர் குப்பை மேட்டை அகற்று வது குறித்தும் அரசுப் பள்ளிகளை பாதுகாக்க வலியுறுத்தியும் வட சென்னையில் உள்ள ஏரி  குளங்களை ஆக்கிர மிப்புகள் இருந்து மீட்டு தூர்வாரி மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர வலியுறுத்தியும் கொசஸ்தலை ஆற்றில் மாசுபடுதலில் இருந்து மீட்டெடுக்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இம்மாநாட்டில் மாவட்ட தலைவராக அரவிந்த், செயலாளராக காஞ்சனா, பொருளாளராக மலைச்செல்வி, கௌரவத் தலைவராக கிருஷ்ண மூர்த்தி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர் இவர்களுடன் 10 பேர் கொண்ட நிர்வாகிகள் உள்ளிட்ட 25 பேர் கொண்ட செயற்குழு தேர்ந்தெடுக்க ப்பட்டது. இம்மாநாட்டை தென்சென்னை மாவட்டச் செயலாளர்ஜெகதீசன் வாழ்த்திப் பேசினார்.  தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் உதயன் நிறைவு செய்து கருத்துரையாற்றினார். முன்னதாக வடசென்னை யில் சுற்றுச்சூழல் காப்போம் என்ற தலைப்பில் வடசென்னை மாவட்ட செயற்குழு உறுப்பினர் லட்சுமிகாந்த் பாரதி யின் படக்காட்சி திறந்து வைக்கப்பட்டது.