செங்கல்பட்டு, டிச. 6- தைலாவரம் ஏரியில் கொட்டப்படும் குப்பைகளை அகற்ற வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை வைத்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் நகராட்சி யில் 21 வார்டுகள் உள்ளன. நகராட்சிக்குட்பட்ட 21 வார்டு தைலாவரம் பகுதியில் ஆயி ரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்துவரு கின்றனர். இப்பகுதியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரி ஒன்று உள்ளது. இந்த ஏரியில் நக ராட்சி நிர்வாகம் தொடர்ந்து குப்பைகளைக் கொட்டிவரு கின்றனர். இதனால் ஏரியின் நீர்பிடிப்பு பகுதி சுருங்கி வரு வதுடன் ஏரியில் தற்போது உள்ள தண்ணீரும் கெட்டு துர்நாற்றம் வீசி வருகின்றது. குடிநீர் ஆதாரமாக உள்ள ஏரியில் குப்பைகளைக் கொட்டுவதாலும், குப்பை களைத் தீயிட்டு எரிப்பதாலும் அப்பகுதி மக்களுக்குச் சுவாசப் பிரச்சனைகள் மற்றும் பல்வேறு நோய் பாதிப்புகளும் ஏற்பட்டுவரு கின்றது. இந்நிலையில் தொடர்ந்து ஏரியில் குப்பைகளை கொட்டிவரும் நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை அப்பகுதி மக்கள் முறை யிட்டும் எந்த வித நடவடிக்கை யும் எடுக்க மறுத்துவரு கின்றனர். இதுகுறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் காட்டாங்கொளத்தூர் பகுதிச் செயலாளர் கே. சேஷாத்திரியிடம் கேட்ட போது மறைமலை நகர் நகராட்சிக்குட்பட்ட பகுதி களில் அகற்றப்படும் குப்பை களைச் சேகரம் செய்வ தற்கான இடம் இல்லை என நிர்வாகம் தெரிவிக்கின்றனர். 21 வது வார்டு தைலா வரம் பகுதி மட்டுமின்றி நகர் முழுவதும் குப்பைகள் சாலைகளில் கொட்டுவதும், சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் கொட்டுவதையும் வாடிக்கை யாக வைத்துள்ளனர் இத னால் சுகாதார சீர்கேடு ஏற்படு கின்றது. நகராட்சி நிர்வாகம் உடனடியாக குப்பை சேக ரம் செய்யும் இடத்தை கண்ட றிந்து குப்பைகளைத் தரம் பிரித்து அகற்ற வேண்டும் அதற்கான உரிய நடவடிக் கையை எடுத்திட வேண்டும் என்றார்.