திருவள்ளூர், மே 27- ஆர்.கே.பேட்டை அருகே ராஜா நகரில் அரசு சட்டப்படி வழங்கிய குடிமனைப் பட்டா நிலததில் தலித் மக்கள் வீடு கட்டிக்கொள்ள அனு மதிக்கவில்லை என்றால் மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் குடியிருக்கும் போராட்டத்தை மேற்கொள்வோம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலை மைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்தார். திருவள்ளூர்மாவட்டம் ஆர்.கே. பேட்டை அருகி லுள்ள ராஜா நகரத்தில் தலித் மக்களுக்கென ஒதுக்கிய இடத்தில் வீடு கட்ட அனுமதிக்க வேண்டும், கும்மிடிப்பூண்டி அருகில் உள்ள தோக்கமூர் தலித் மக்கள் வீட்டை சுற்றி எழுப்பியுள்ள தீண்டாமைச் சுவரை அகற்ற வேண்டும், விஷ்ணுவாக்கம் பேருந்து நிழற்குடையை அரசு தீர்மானித்த இடத்தில் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் திரு வள்ளூர் பஜாரில் வெள்ளி யன்று (மே 27) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலை வர் இ.எழிலரசன் தலைமை தாங்கினார். இதில் கலந்து கொண்டு ஜி.ராமகிருஷ்ணன் பேசுகை யில், “ராஜா நகரில் 27 ஆண்டுகளுக்கு முன்பு 107 தலித் குடும்பங்களுக்கு வீடு கட்ட அரசு குடிமனை பட்டா வழங்கியது. ஆனால் இதுவரை அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட மனைகளில் குடியேற முடியவில்லை. மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளை பலமுறை சந்தித்து மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை” என்றார். \
திருவள்ளூர் அருகே உள்ள விஷ்ணுவாக்கம் கிராமத்தில் பேருந்து நிழற்குடை அமைப்பதற்கும் உரிய நடவடிக்கை எடுக்காத நிலை உள்ளது. கும்மிடிப்பூண்டி அருகில் தோக்கமூரில் ஆறு ஆண்டு களாக தீண்டாமைச் சுவர் நீடிக்கிறது. இதற்கெல்லாம் சாதிய வடிவத்தில் எதிர்ப்பு வருகிறது என்றும் அவர் கூறினார். தீண்டாமை கொடுமை யின் முதுகெலும்பை ஒடித்த இயக்கம் செங்கொடி இயக்கம் என்றும் தோக்கமூர் தீண்டாமை சுவரை உடனடியாக அகற்றவில்லை என்றால், அந்த சுவரை அகற்ற களத்தில் இறங்குவோம் என்றும் மக்களிடம் பணம் வசூலித்து நிற்குடை அமைக்கும் பணியையும் மேற்கொள்வோம் என்றும் ராமகிருஷ்ணன் தெரி வித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.கண்ணன் பேசுகையில், “திரு வள்ளூர் மாவட்டத்தில் தலித் மக்களின் முக்கிய மூன்று பிரச்சனைகளை முன்வைத்து தொடர்ச்சியாக போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. ஆனால் மாவட்ட நிர்வாகம் கண்டு கொள்ளாமல் மெத்தனமாக உள்ளது”என்றார். கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.நம்பு ராஜன், மாவட்டச் செய லாளர் எஸ்.கோபால், திரு வள்ளூர் வட்டச் செய லாளர் ஆர்.தமிழ்அரசு, கும்மிடிப்பூண்டி வட்டச் செயலாளர் இ. ராஜேந்திரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.பெருமாள், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலப் பொருளாளர் இ.மோகனா, மாவட்டச் செயலாளர் த.கன்னியப்பன் ஆகியோரும் பேசினர்.