சென்னை, டிச.16 - சென்னை உயர்நீதிமன்ற வழக்கறி ஞர்கள் சங்க தேர்தலில் ஜி.மோகன கிருஷ்ணன் தலைவராக வெற்றிபெற்றுள் ளார்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் 100 ஆண்டுகளுக்கு மேல் பழமையான வழக்கறி ஞர்கள் சங்கம் (எம்எச்ஏஏ) இயங்கி வருகிறது. இந்த சங்கத்துக்கு 2 ஆண்டு களுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படுவது வழக்கம். கடந்த 2016 ஆம் ஆண்டு தேர்தல் நடைபெற்ற நிலையில், பல்வேறு வழக்கு கள் காரணமாக தேர்தல் தள்ளிப்போனது.
இதனிடையே, கடந்த ஜனவரி மாதம் தேர்தல் மீண்டும் நடத்தப்பட்டது. ஆனால், அப்போது ஏற்பட்ட பிரச்சனை யின் காரணமாக தேர்தல் பாதியில் ரத்து செய்யப்பட்டது. பின்னர் பலத்த பாதுகாப்பு டன் தேர்தலை நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், சுமார் 7 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை உயர்நீதி மன்ற வழக்கறிஞர்கள் தேர்தல் டிச.15 அன்று நடைபெற்றது.
தலைவர் பதவிக்கு 9 பேரும், துணைத் தலைவர் பதவிக்கு 8 பேரும், செயலாளர் பதவிக்கு 10 பேரும், பொருளாளர் பதவிக்கு 9 பேரும், நூலகர் பதவிக்கு 11 பேரும், மூத்த செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு 42 பேரும், இளைய செயற்குழு உறுப்பினர் பதவிக்கு 35 பேரும் போட்டியிட்டனர்.
பாஜக தலைவர் தோல்வி
முதலில் தலைவர் மற்றும் செயலா ளர் பதவிக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் 1,301 வாக்கு கள் பெற்று சங்கத்தின் தலைவராக ஜி. மோகனகிருஷ்ணன் தேர்ந்தெடுக்கப்பட்டார். தலைவருக்கான தேர்தலில் போட்டியிட்ட பால் கனகராஜ் 1134 வாக்குகளும், வேல்முருகன் 734 வாக்குகளும் பெற்றனர்.
தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி.மோகனகிருஷ்ணன், கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று, சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். மீண்டும் அவர் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். வழக்கறி ஞர் சங்கத்தின் முன்னாள் தலைவரும் பாஜகவின் சட்டப்பிரிவு செயலாளருமான ஆர்.சி.பால்கனகராஜ் தோல்வியடைந்தார்.