“ராக்கெட்” “விண்வெளிப் பயணம் போகலாம் வாங்க” ஆம் இந்த நூலை படிப்பவர்கள் நிச்சயம் விண்வெளி பயணம் செல் வதற்கான ஆர்வம் ஏற்படும். “ராக்கெட்” என்னும் சொல் இத்தாலிய மொழியின் ராக்கெட்டோ எனும் சொல்லில் இருந்து உருவானது. 1798 ஆம் ஆண்டே திப்பு சுல்தான் கிழக்கு இந்திய கம்பெனி படைகளுக்கு எதிராக “மைசூர் ராக்கெட்டுகள்” பயன்படுத்தி உள்ளார்.
இதுதான் விண் ஊர்திகளுக்கான முதல் படி என நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார். 1806 ஆம் ஆண்டில் செல்ல பிராணி களை ராக்கெட்டில் வைத்து கட்டி உல கின் முதல் பாராசூட்களின் மூலம் தரை யிறக்கினார் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த கிலாட் ருகேசரி.
1913 ஆம் ஆண்டில் சந்திரனுக்கு பய ணிக்க தேவைப்படும் ஆற்றலை கணக்கிட்டவர் பிரஞ்சு நாட்டைச் சேர்ந்த பொறியாளர் ராபர்ட் எஸ்னால்டு. 1926 ஆம் ஆண்டில் திரவ எரிபொருள் ராக்கெட்டை விண்வெளியில் செலுத்தி யவர் அமெரிக்க நாட்டின் ராபர்ட் கொடார்டு. அதுபோன்று விண்வெளி பய ணத்திற்கான உடைகளை அறிமுகம் செய்தார் எமிலோ ஹரோ பைநார்ஷ். 1947 ஆம் ஆண்டில் விண்வெளி பயணத்திற்கு பயன்படும் ஆய்வு நூலினை இந்தியாவைச் சேர்ந்த எஸ். கே. மித்ரா ஆங்கிலத்தில் வெளியிட்டார்.
1961 ஆம் ஆண்டு ரஷ்ய விண்வெளி வீரர் யூரி ககாரின் பூமியிலிருந்து விண் ணில் பறந்த முதல் மனிதன் ஆவார். சந்திரனுக்கு முதன் முதலில் ராக்கெட் தயாரிக்கப்பட்ட நகரம் அமெரிக்காவில் உள்ள ஹன்ட்ரஸ்வை நகரம் தான். அது போன்று முதன் முதலில் விண்வெளிப் பயணம் மேற்கொண்டவர் சோவியத் யூனியனைச் சேர்ந்த வாலண்டினா. நம் இந்திய நாடு முதல் முதலில் ராக்கெட் ஏவியது 1963 ஆண்டு தும்பா ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து தான். இந்தியாவின் முதல் செயற்கைக் கோளான ஆரியபட்டாவை 1975 ஆம் ஆண்டு விண்ணில் செலுத்தப்பட்டது.
1984 ஆம் ஆண்டு விண்வெளியில் பறந்த முதல் இந்தியர் ராகேஷ் சர்மா. தும்பா ராக்கெட் தளம், சதீஷ் தவான் விண்வெளி ஆய்வுதளம், ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளம் ஆகியவை இந்தி யாவில் அமைக்கப்பட்டுள்ளது தமிழ கத்தில் குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் உருவாகி வருகிறது. விரைவில் பயன்பாட்டுக்கு வரும். 2008 இல் சந்திரயான் - 1 அனுப்பி நில வில் தண்ணீர் உள்ளதை கண்டறிந்து உலகிற்கு அறிவித்தது இந்தியா. 2013 இல் மங்கள்யான் செயற்கை கோள் செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப் பட்டது.
இது ஆசியாவின் முதல் விண்வெளி ஊர். எலன் மாஸ்க் ஸ்பேஸ் எக்ஸ் நிறு வனம் செவ்வாய்கிரகத்தில் மனிதனை குடியேற வைக்க திட்டமிட்டு வருகிறது.இதுபோன்ற முக்கியமான தகவல்கள் ஏராளம் உள்ளது. இந்நூலினைப் படிக்கும் மாணவர்கள் நிச்சயமாக ராக்கெட் விஞ்ஞானியாக உருவாக உத்வேகமூட்டும் என்பதில் ஐயமில்லை.
“ராக்கெட்”
நூலாசிரியர் : ஆயிஷா நடராஜன்
விலை: ரூபாய் 80/-
வெளியீடு: புக்ஸ் ஃபார் சில்ட்ரன்
சென்னை -600018
தொடர்பு எண்: 044 24332424