தென் மாவட்டங்களான நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னி யாகுமரி வரலாறு காணாத பெருமழையால் பாதிக்கப்பட்டுள்ளன. இம்மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
இந்நிலையில், நெல்லை, தூத்துக் குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங் களில் இருந்து புறப்பட வேண்டிய ரயில் கள் பகுதியளவு ரத்து செய்யப்பட்டு, மதுரையில் இருந்து இயக்கப்படுகின் றன.
மதுரையில் இருந்து இயக்கப்படும் 9 ரயில்களின் விவரம்: 22667 நாகர் கோவில் - கோவை அதிவிரைவு ரயில், 12634 கன்னியாகுமரி - சென்னை எழும்பூர் அதிவிரைவு ரயில், 22658 நாகர்கோவில் - தாம்பரம் அதிவிரைவு ரயில், 17236 நாகர்கோவில் - எஸ்எம்விடி பெங்களூரு விரைவு ரயில், 11022 திருநெல்வேலி - தாதர் விரைவு ரயில், 16235 தூத்துக்குடி - மைசூர் விரைவு ரயில், 20606 திருச் செந்தூர் - மைசூர் அதிவிரைவு ரயில், 12632 திருநெல்வேலி - சென்னை எழும் பூர் அதிவிரைவு ரயில், 12694 தூத்துக் குடி - சென்னை எழும்பூர் விரைவு ரயில்.