tamilnadu

தீக்கதிர் முக்கிய செய்திகள்

ஜூலை 8 முதல் மோடி மீண்டும் வெளிநாடு பயணம்

புதுதில்லி, ஜூலை 4 - மூன்றாவது முறையாக பிரதமர் பதவியேற்ற பிரதமர் நரேந்திர மோடி, ஜி7 நாடுகளின் மாநாட்டில் பங்கேற்பதற்காக கடந்த ஜூன் 14 அன்று இத்தாலி சென்று வந்தார். தற்போது, ஜூலை 8 முதல் 10 வரை ரஷ்யா, ஆஸ்திரியா ஆகிய நாடுகளுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்கிறார். ஜூலை 8, 9 ஆகிய தேதி களில் மாஸ்கோவில் பய ணம் மேற்கொள்ளும் பிர தமர் மோடி, 9-ஆம் தேதி ஆஸ்திரியாவுக்கு செல் கிறார். கடந்த 41 ஆண்டு களில் இந்தியப் பிரதமர் ஒரு வர் ஆஸ்திரியா செல்வது இதுவே முதல்முறையாகும். 

ஹாத்ரஸ்  செல்கிறார் ராகுல் காந்தி

புதுதில்லி, ஜூலை 4 - உத்தரப் பிரதேச மாநி லம் ஹாத்ரஸ் மாவட்டம் புல்ராய் கிராமத்தில் போலே பாபா என்ற இந்துமத போதகரின் சத்சங்கம் நிகழ்ச்சியில், கூட்ட நெரிசல் ஏற்பட்டு, சிக்கி பெண்கள், குழந்தைகள் உள்பட 121  பேர் உயிரிழந்தனர். மேலும் காயமடைந்த பலர் மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சை பெற்று வரு கின்றனர். இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்களை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நேரில் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆந்திராவுக்கு  வரிச்சலுகை: சந்திரபாபு நாயுடு நெருக்கடி

புதுதில்லி, ஜூலை 4 - ஆந்திரப் பிரதேசத்திற்கு வரிச்சலுகை வழங்க வேண்டும் என்று அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

பிரதமர் மோடியை ஆந்திரா முதல்வர் சந்திர பாபு நாயுடு தில்லியில் வியாழனன்று நேரில் சந்தித் தார். இந்த சந்திப்பின்போது பல முக்கிய பிரச்சனைகள் குறித்து இருவரும் ஆலோ சித்தனர். அப்போது, பிரதம ரிடம் ஆந்திர மாநிலத்திற்கு வரிச்சலுகை வழங்க வேண்டும் என சந்திரபாபு நாயுடு வலியுறுத்தினார் என  தகவல் வெளியாகிஉள்ளது.

லண்டன் திரைப்பட விருதை வென்ற கேப்டன் மில்லர்!

சென்னை, ஜூலை 4 - தனுஷ் நடித்து கடந்த ஜனவரி மாதம் வெளியான ‘கேப்டன் மில்லர்’ திரைப் படம், லண்டன் தேசிய திரைப்பட விழாவில் 2024-ஆம் ஆண்டுக்கான சிறந்த அயல்மொழி திரைப்பட விருதை வென்றுள்ளது.

இத்தகவலை படத்தின் இயக்குநர் அருண் மாதேஸ் வரன் தனது சமூகவலை தளப் பக்கத்தில் தெரி வித்துள்ளார்.

“தேசிய திரைப்பட விரு துக்கு நன்றி. தனுஷின் கேப் டன் மில்லர் படம், ஸ்பெ யினின் பைட்டிங் தி வுல்ஃப் பேக், ஜெர்மனியின் சிக்ஸ்டி  மினிட்ஸ், தி ஹார்ட்பிரேக் ஏஜென்சி, ஜப்பானின் தி பாரடெஸ் உள்ளிட்ட படங் களை வென்று மதிப்புமிக்க விருதை பெற்றுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.