சென்னை, பிப். 23 - தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு நிறு வனம் வருமான வரிச்சோதனையில் மாட்டிய பிறகு பாஜக-வுக்கு ரூ. 100 கோடியைத் தேர்தல் நன்கொடை யாக வழங்கி உள்ளது என்ற உண்மையைப் பத்திரிகையாளர் தான்யா ராஜேந்திரன் கண்டுபிடித்துள் ளார்.
2018 முதல் 2023 வரை 30 நிறு வனங்கள் பாஜக-வுக்கு ரூ.335 கோடி நன்கொடை கொடுத்துள்ளன. இதில் விஷேசம் என்னவென்றால், இந்தக் குறிப்பிட்ட 30 நிறுவனங்களும் மோடி அரசின் வருமான வரிச் சோதனை அல்லது அமலாக்கத்துறை சோத னைக்கு ஆளான பிறகு பாஜக-வுக்கு நன்கொடை அளித்துள்ளன என்பது தான். இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு நிறுவனம், வருமான வரித்துறை யினரின் சோதனைக்குப் பிறகு பாஜக- வுக்கு ரூ. 100 கோடி நன்கொடை அளித்துள்ளது.
தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக் கப்பட்டுள்ள ஆவணங்களைத் திரட்டி இந்த உண்மைகளை வெளிச்ச த்திற்குக் கொண்டு வந்துள் ளார் பத்திரிகையாளர் தான்யா ராஜேந்திரன். இதுதொடர்பாக அவர் தனியார் தொலைக் காட்சிக்குப் பேட்டி அளித்துள்ளார்.
அதில், தான்யா ராஜேந்திரன் மேலும் கூறியிருப்பதாவது:
“முதலில் நாம் சில அடிப்படை யான விஷயங்களைப் புரிந்து கொள்ள வேண்டும். பொதுவாக அரசியல் கட்சிகளுக்கு, நேரடியாகப் பணமாக ஒரு சின்ன அளவிலும், அடுத்து தேர்தல் பத்திரங்கள் (Electoral Bonds) மூலமும், மூன்றாவதாக தேர்தல் அறக்கட்டளைகள் (Electoral trust) மூலமாகவும் மூன்று வழிகளில் நன்கொடை அளிக்கப்படுகிறது. இதில், நாங்கள் தேர்தல் நன்கொடைகள் (Election donation) பற்றிய ஆவணங்களைத் திரட்டி இருக் கிறோம்.
இந்த ஆவணங்கள் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன. அதை யார் வேண்டுமானாலும் பார்க்க முடியும். அந்த வகையில், பாஜக-வுக்குக் கடந்த 10 ஆண்டுகளில் 8 ஆயிரம் கோடி தேர்தல் நன்கொடை மூலம் கிடைத்துள் ளது. இதில், நாங்கள் ஆண்டு வாரியாக அளிக்கப்பட்ட தேர்தல் நன்கொடை களைப் பற்றிய ஆவணங்களை மட்டும் தனியாக எடுத்து ஆராய்ந்தோம். அதில் ஒரு கோடிக்கு மேல் நன்கொடை கொடுத்த நிறுவனங்களைப் பற்றிய பட்டியலை மட்டும் எடுத்தோம்.
பல நிறுவனங்கள் அரசியல் கட்சி களுக்கு கோடிகோடியாக பணம் கொடுக்கிறார்கள். அப்படிப் பாஜக வுக்கு நன்கொடை கொடுத்தவர்கள் யார்? அவர்கள் நிறுவனம் மீது வருமான வரி சோதனையோ அல்லது அமலாக்கத் துறை சோதனையையோ இந்தக் குறிப் பிட்ட 10 ஆண்டுகளில் நடத்தப்பட்டு ள்ளதா? என ஆராய்ந்தோம். அப்படி ஆராய்ந்ததில் வருமான வரித்துறைச் சோதனை நடத்தப்பட்ட பிறகு ஒரு நிறுவனம் நன்கொடை கொடுத் துள்ளது தெரியவந்தது.
உதாரணமாக அந்த நிறுவனம் ‘ஏ’ என்று வைத்துக் கொள்வோம். அந்த ‘ஏ’ நிறுவனம், கடந்த 2014 முதல் பாஜக-வுக்கு நன்கொடையே கொடுக்கவில்லை. அந்த நிறுவனத்தின் மீது 2018-ல் வருமான வரித்துறை ரெய்டு நடத்தப்படுகிறது. அதன்பின்னர் அந்த ஆண்டு மட்டும் அந்த நிறுவனம் பாஜகவுக்கு நன்கொடை அளித்துள்ளது. 2022-இல் மீண்டும் ஒரு ரெய்டு நடத்தப்படுகிறது. அப் போது திரும்பவும் அந்த நிறு வனம் பாஜகவுக்கு நன்கொடை அளித்துள்ளது. உதாரணமாகத் தமிழ்நாட்டில் உள்ள ஒரு நிறுவனம் பாஜகவுக்கு 100 கோடி கொடுத்துள்ளது.
அதுவும் ரெய்டு நடத்தப்பட்ட பிறகு இந்த நன்கொடையை வழங்கியுள்ளது. இன்னொரு நிறுவனம் 11 கோடி கொடுத்துள்ளது. இதே நிறுவனங்கள் மற்ற கட்சிகளுக்குக் கொடுத்துள்ள னவா என்று ஒப்பிட்டுப் பார்த்தோம். காங்கிரசுக்கோ அல்லது திமுக வுக்கோ அதிமுகவுக்கோ இவர்கள் கொடுத்தார்களா எனத் தேடி னோம். அவர்கள் இந்தக் கட்சிகளுக்கு நன்கொடை கொடுக்கவே இல்லை. பாஜகவுக்கு மட்டுமே கொடுத்துள் ளன. அந்த 11 கோடியை அந்த நிறு வனம் எப்போது கொடுத்துள்ளது எனப் பார்த்தோம். அதன் மீது ரெய்டு நடந்த ஆண்டு நன்கொடை வழங்கப் பட்டுள்ளது.
ஆகவே தான் எங்களுக்கு ஒரு சந்தேகம் வந்துள்ளது. முதலில் ரெய்டு நடக்கிறது. அதன் பின்னர் பாஜக வுக்கு நன்கொடை போகிறது. இதில் ஏதோ ஒரு சந்தேகத்திற்கு உரிய யுக்தி உள்ளதாகத் தோன்றுகிறது. இப்படி நன்கொடை கொடுத்த நிறு வனங்கள் அரசிடமிருந்து ஏதேனும் ஒருவகையில் ஆதாயம் பெற்றிருக்க லாம். அல்லது ஆதாயம் பெறுவதற் காகக் கொடுத்து ஒரு ஆதாயமும் கிடைக்காமல் கூடப் போயிருக்கலாம்.
ஆனால், இந்த நன்கொடைகள் வழங்க பட்டுள்ள காலகட்டத்தை ஆராயும் போது நமக்கு ஒரு சந்தேகம் உரு வாவது உண்மை. உதாரணமாக தெலுங்கானாவில் ஒரு நிறுவனம் உள்ளது. அது முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ.-வின் நிறுவனம். பல ஆண்டுகளாகக் காங்கிரசிலிருந்து வந்த அவர், பாஜக வுக்கு மாறிவிட்டார்.
இரண்டு ஆண்டு கள் பாஜகவில் இருந்தார். அப்போது அந்த ஆண்டு அந்த கம்பெனி 6 கோடி நன்கொடையை பாஜக-வுக்கு கொடுத்துள்ளது. அதன்பின்னர் அவர் மீண்டும் காங்கிரசுக்குச் சென்று விட்டார். உடனே 20 நாட்களில் அந்த நிறுவனம் மீது அமலாக்கத்துறை சோதனை நடத்தப்படுகிறது. சென்னையில் உள்ள ஒரு நிறு வனம் 3 கோடி பாஜகவுக்கு நன்கொடை கொடுத்துள்ளது. அதன் முகவரியில் போய் கம்பெனி உள்ளதா எனப் பார்த்தோம். அந்த முகவரியில் அப்படி ஒரு நிறுவனமே இல்லை.
இப்படி பாஜகவுக்கு அளிக்கப்பட்ட நன்கொடை மீதும் அந்த நிறுவனங்கள் மீதும் சந்தேகம் எழுகிறது. ஆகவேதான், தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜகவுக்கு அளிக்கப்பட்டுள்ள நன்கொடை பற்றிய ஆவணங்களைப் பொதுவெளியில் வெளியிட வேண்டும் என்ற கோரிக்கை எழுகிறது. அப்படி வெளியிட்டால் பல உண்மைகள் உலகத்திற்குத் தெரியவரும்.” இவ்வாறு தான்யா ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.