சென்னை, ஜூன் 11- நடிகர்கள் ராதாரவி, சரத் குமாருக்கு எதிரான நடிகர் சங்க நில முறைகேடு புகார் குறித்து நடிகர் விஷால் காஞ்சிபுரம் குற்றப் பிரிவு அலுவலகத்தில் ஆஜராகி சில ஆவ ணங்களை அளித்து விளக்கம ளித்தார். காஞ்சிபுரம் மாவட்டம் கூடுவாஞ் சேரி அருகே வேங்கடமங்கலத்தில் நடிகர் சங்கத்துக்கு சொந்தமான, 26 சென்ட் நிலத்தை, சங்கத்தின் தலைவ ராக இருந்த சரத்குமார், பொதுச்செய லாளராக இருந்த ராதாரவி உள்ளிட்ட நான்கு பேர் முறைகேடாக விற்பனை செய்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து தற்போது நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளராக இருக்கும் விஷால், காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவு காவல்நிலை யத்தில் புகார் அளித்தார். ஆனால் விசாரணை சரியாக நடை பெறவில்லை என்று உயர்நீதி மன்றத்தை நாடினார். அங்கு 3 மாதத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய குற்றப்பிரிவு காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டது. இதையடுத்து, சரத்குமார் மற்றும் ராதாரவி ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்த குற்றப்பிரிவு போலீசார், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். வழக்கில் இரு வரும் ஆஜராகி விளக்கம் அளிக்க கடந்த மாதம் உத்தரவிடப்பட்டது. ஆனால் இதுவரை அவர்கள் ஆஜராகி எந்த விளக்கமும் அளிக்க வில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் விசாரணைக்கு தேவையான உரிய ஆவணங்களை நேரில் ஆஜராகி தாக்கல் செய்ய விஷாலுக்கு உத்தர விடப்பட்டது. இதை அடுத்து 3 பைகள் நிறைய ஆவணங்களுடன் செவ்வாயன்று (ஜூன் 11) விஷால், குற்றப்பிரிவு முன் ஆஜ ரானார். அவரிடம் மாவட்ட குற்றப்பிரிவு துணை கண்காணிப் பாளர் தென்னரசு விசாரணை மேற்கொண்டார்.