சென்னை, ஏப். 23 - அமெரிக்கா பிடித்து வைத்துள்ள 22 மாலுமிகளையும், ஈரான் பிடித்து வைத்துள்ள 16 மாலுமிகளையும் விடு விக்க ஒன்றிய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஃபார்வர்டு சீமென்ஸ் யூனியன் ஆஃப் இந்தியா (சிஐடியு) வலியுறுத்தி உள்ளது.
இதுதொடர்பாக ஃபார்வர்டு சீமென்ஸ் யூனியன் ஆஃப் இந்தியா துணைத் தலைவர் டி.நரேந்திர ராவ், சிஐடியு மாநிலப் பொதுச்செயலாளர் ஜி.சுகுமாறன், மாநிலச் செயலாளர் சி.திருவேட்டை, போர்ட் அன் டாக் எம்ப்ளாயீஸ் யூனியன் பொதுச் செய லாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அமெரிக்கா
எம்.வி.டாலி கப்பல் மார்ச் 26 ஆம் தேதி கண்டெய்னர்களை ஏற்றிக் கொண்டு அமெரிக்காவின் பால்டி மோர் நகரத்தில் உள்ள பட்டாப்ஸ்கோ நதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது கப்பலில் ஏற்பட்ட மின் பழுது காரணமாக அதன் சக்தி இழந்து நதியின் மீது இருந்த பிரான்சிஸ் ஸ்காட் பாலத்தின் மீது மோதியது. இதை யடுத்து அந்த கப்பலில் பணியாற்றி வரும் 22 மாலுமிகளிடம் அமெரிக்க புலன் விசாரணைக் குழு குற்றவியல் விசாரணையை நடத்தி வருகிறது.
இந்த விபத்து முற்றிலும் மனித சக்தியின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற் பட்டது. எனவே, கப்பலில் பணி யாற்றிய மாலுமிகள் விபத்தை வேண்டுமென்றே செய்தனர் என்றோ அல்லது அது ஒரு கிரிமினல் குற்ற மாகவோ கருத முடியாது.
கப்பல் அதன் உந்து சக்தியை இழந்ததால், அதனை கட்டுப்படுத்த முடியாமல் போயிற்று. எனவே, அது மனித சக்திக்கு முற்றிலும் அப்பாற் பட்ட ஒரு செயல். ஆகவே, விபத்தை குற்றமாக கருதாமல் அவர்களை உடனே விடுவிக்க வேண்டும்.
மேரிலாந்து என அழைக்கப்படும் மாவட்டத்தின் கவர்னர் வெஸ்மூர் கூறும் போது, கப்பலில் இருந்து எழுப்பப்பட்ட பேரிடர் காலத்தின் அபாய சங்கு ஒலி அழைப்பின் காரண மாக, பாலத்தின் மீது செல்லும் வாக னங்களின் எண்ணிக்கையை குறைக்க முடிந்தது. பாலத்தின் மீது அதிக வாகனப் போக்குவரத்துத் தடுப்பதில் அதிகாரிகளுக்கு உதவியது என்று வாக்குமூலம் அளித்துள்ளார்.
ஈரான்
இஸ்ரேல் உடன் இணைக்கப்பட்ட எம்எஸ்சி ஏரிஸ் என்ற கப்பலை ஓமன் வளைகுடாவில் உள்ள ஹார்முஸ் ஜல சந்தி அருகே ஏப்.13 ஆம் தேதி அன்று ஈரான் கைப்பற்றியது. இந்த கப்பலில் 18 இந்திய மாலுமிகள் உள்ளனர். அவர்கள் ஈரானிய அரசின் ராணுவ கட்டுப்பாட்டில் உள்ளனர். இந்த மாலு மிகளை குடும்பத்தினர் தொடர்பு கொள்ள முடியவில்லை. தொலை பேசி, மடிக்கணினிகளை பயன்படுத்த வும் மாலுமிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் - பாலஸ்தீன போர், செங்கடல் பகுதியில் சர்வதேச கடல்வழி வர்த்தகத்திற்கு பெரும் அச்சு றுத்தல் ஏற்பட்டுள்ளது. இந்த பகுதி யில் மேலும் பதற்றம் அதிகரித்து வரு கிறது. இந்த கப்பலில் பணியாற்றி வரும் 18 மாலுமிகளில் 17 பேர் இந்தி யர்கள். குறிப்பாக 17 பேரில் 4 பேர் தூத்துக்குடி, தலா ஒருவர் கடலூர், மன்னார்குடி பகுதிகளை சேர்ந்தவர்கள்.
எனவே, இந்த இரண்டு கப்பல் களை சேர்ந்த மாலுமிகளை விரைவில் மீட்க இந்திய அரசின் வெளியுறவு அமைச்சகமும் மற்றும் தமிழ்நாடு முத லமைச்சர் உடனடியாக தலையிட வேண்டும். எம்எஸ்சி ஏரிஸ் கப்பலில் இருந்து கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த பெண் மாலுமி செல்வி ஆன் டெஸ்ஸா ஜோசப்பை வெளியுற வுத்துறை அமைச்சகம் மீட்டுள்ளது. அதே போன்று 16 இந்திய மாலுமி களை மீட்க தீவிர கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.