சென்னை, டிச.8 - மிக்ஜம் புயல் பொதுமக்களுக்கு இடையூறுகளை ஏற்படுத்தியுள்ளது. இதன் விளைவாக சென்னையில் நடைபெற இருந்த பார்முலா 4 கார் பந்தயம் கால வரையறையின்றி தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு வருமாறு:-
மிக்ஜம் புயல் பொதுமக்களுக்கு இடையூறுகளை ஏற்படுத்தியுள்ளது. இதன் விளைவாக சென்னையில் நடைபெற இருந்த பார்முலா 4 கார் பந்தயம் கால வரையறையின்றி தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது என்று குறிப்பிடப் பட்டுள்ளது.
முன்னதாக, டிச.5 ஆம் தேதி அரசு வெளியிட்டிருந்த அறிவிப்பில், “மிக்ஜம் புயலால் ஏற்பட்ட வரலாறு காணாத மழை வெள்ளத்தால் சென்னை மற்றும் அதனைச் சுற்றி யுள்ள பகுதிகளில் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக் கப்பட்டுள்ளது. மழை நீர் வெளி யேற்றம், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் பெருநகர சென்னை மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் அரசு துறை சார்ந்த அலுவலர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். எனவே, 2023 டிசம்பர் 9 மற்றும் 10 ஆம் தேதி களில் திட்டமிடப்பட்டிருந்த சென்னை பார்முலா பந்தய நிகழ்வுகள் தமிழ்நாடு அரசால் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத் தக்கது.
இதனிடையே, இந்த கார் பந்தயத்திற்கு தடை விதிக்கக் கோரி, மருத்துவர் ஸ்ரீஹரிஷ், லூயிஸ் ராஜ், டிஎன்பிஎஸ்சி முன்னாள் உறுப்பி னர் பாலுசாமி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதி மன்றம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் பார்முலா 4 பந்தயத்தை நடத்தாதபோது, தனியார் அமைப்பு நடத்தும் பந்தயத்துக்கு ஏன் இவ்வளவு நிதி ஒதுக்கப்படுகிறது? பந்தயம் நடத்து வதால் அரசு ஈட்டும் வருமானம் குறித்த விவரங்கள் உள்ளனவா? ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளதா? என கேள்வி எழுப்பியிருந்தார்.