சென்னை, ஏப்.21- தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் யூனியன் (T.U.J) மாநிலத் தலைவர் பி.எஸ்.டி.புருஷோத்த மன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
கும்பகோணம் பாலக்கரை அருகே ஒரு கும்பல் அரசு பேருந்து ஓட்டுநர் ரமேஷ் என்பவரை தாக்கி யது. அவ்வழியே வந்த நியூஸ் ஜெ தொலைக்காட்சி செய்தியாளர் நாடிமுத்து, மக்கள் தொலைக்காட்சி செய்தியாளர் அருண் ஆகியோர் தாக்குதலை ஒளிப்பதிவு செய்தனர். இதனைப் பார்த்த அந்த கும்பல் செய்தியாளர்கள் மீதும் கொலை வெறித் தாக்குதல் நடத்தியது. இதில் அவர்கள் காயம டைந்தனர். அந்த சமூக விரோதிகளை உடனடி யாக கைது செய்து, சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
திமுகவின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சரும் உயர்நிலைச் செயல்திட்டக் குழு உறுப்பினருமான ஆற்காடு வீராசாமியின் 88 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அண்ணா நகரில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். அமைச்சர்கள் கே.என். நேரு, ஆர். காந்தி, டி.ஆர்.பி ராஜா, மக்களவை உறுப்பினர்கள் ஆ.ராசா, ஆற்காடு வீராசாமியின் மகன் கலாநிதி வீராசாமி மற்றும் பலர் உடனிருந்தனர்.