tamilnadu

img

60 வயதை கடந்த மீனவர்களுக்கு மாதம் ரூ. 3,000 ஓய்வூதியம் வழங்கிடுக மீன்பிடி தொழிற்சங்க மாநாடு கோரிக்கை

சென்னை, ஆக. 24- 60 வயதை கடந்த மீனவர்களுக்கு வாரியத்தின் மூலம் மாதம் 3,000 ரூபாய் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என மீன்பிடி  தொழிற்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

சென்னை செங்கை மீன்பிடி தொழிற் சங்கத்தின் வடசென்னை மாவட்ட  21ஆவது  மாநாடு காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் தலைவர் பி.சி.மாறன் தலைமையில் நடைபெற்றது.

துணைச் செயலாளர் பி.மலர்கொடி சங்க  கொடியை ஏற்றி வைத்தார். ராஜேஷ் அஞ்சலி  தீர்மானத்தை வாசித்தார். பொதுச் செயலாளர் ஆர்.லோகநாதன் வேலை அறிக்கையை சமர்ப்பித்தார். பொருளாளர் டி.வெங்கட் வரவு செலவு அறிக்கையை சமர்ப்பித்தார். சிஐடியு மாவட்டத் தலைவர் எஸ்.கே.மகேந்திரன் மாநாட்டை நிறைவு செய்து பேசினார்.

முன்னதாக துணைத் தலைவர்  பி.விஜயன் வரவேற்றார். கே.செல்வானந் தன் நன்றி கூறினார்.

தீர்மானங்கள்

60 வயது கடந்த மீனவர்களுக்கு வாரியத் தின் மூலம் மாதம் 3,000 ரூபாய் ஓய்வூதியம் வழங்க வேண்டும், விசைப்படகு மீனவர்க ளுக்கு மாதம் 3,000 லிட்டருக்கு டீசல் மானியம்  வழங்க வேண்டும், துறைமுகம் விரிவாக்கம்  என்ற பெயரில் மீனவ மக்கள் நடத்தும் சிறு  கடைகளை அப்புறப்படுத்தக் கூடாது, மீனவ நல வாரியத்திற்கு தனி ஊழியர்களை நியமனம் செய்ய வேண்டும், எல்ஐசி, ரயில்வே, பாதுகாப்பு துறை உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை தனியார், கார்ப்பரேட் நிறுவனங்களிடம் விற்பனை செய்யக் கூடாது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

புதிய நிர்வாகிகள்

தலைவராக ஆர்.லோகநாதன், செய லாளராக கே.செல்வானந்தம், பொருளா ளராக டி.வெங்கட் உள்ளிட்ட 19 பேர் தேர்வு  செய்யப்பட்டனர்.