tamilnadu

img

தீக்கதிர் விரைவு செய்திகள்

வாலிபருக்கு அரிவாள் வெட்டு

அம்பத்தூர், ஏப்.15- பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கம் கே.கே.நகரைச் சேர்ந்தவர் சின்னப்பன் (32 ). இவரது நண்பர் மோகன்ராஜ் (35). இருவரும் ஓட்டுநர்களாக பணி செய்து வருகின்றனர். ஒரு கோவில் திருவிழாவில் இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஊர் பொதுமக்கள் இருவரையும் சமரசம் செய்து வைத்தனர். இந்நிலையில் திங்கட்கிழமை மாலை குமணன்சாவடியில் சின்னப்பன் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு அரிவா லோடு வந்த மோகன்ராஜ்  சின்னப்பனை வெட்டினார். இதில் சின்னப்பன் கையில்  காயம் ஏற்பட்டது.உடனே, போக்குவரத்து காவலர்கள் மோகன்ராஜை மடக்கி பிடித்து பூந்தமல்லி காவல் நிலையத்தில் ஒப்படைத்த னர்.

மீன்பிடி தடைக்காலம் தொடங்கியது

கடலூர், ஏப்.15-  நடப்பாண்டுக்கான மீன்பிடி தடைக்காலம் திங்கள்கிழமை நள்ளி ரவு 12 மணிக்கு தொடங்கி யது. இதனால் கடலூர் மாவட்டத்தில் உள்ள விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வில்லை. இருப்பினும் நாட்டு மர படகு மற்றும் பைபர் படகுகள் 5 நாட்டிக்கல் தூரம் சென்று மீன்பிடிக்க அனுமதிக்கப்படுகிறது. அத னால் நாட்டு மர படகு மற்றும் பைபர் படகு மீன வர்கள் மட்டும் வழக்கம் போல் மீன்பிடித்து வருகின்றனர். மேலும் ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடிக்கும் விசைப்படகு மீனவர்களும், தடைக் காலம் காரணமாக  கரைக்கு திரும்பி விட்டனர். செவ்வாய்க்கிழமை முதல் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

திருவண்ணாமலை மாவட்டத்தில் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி,  செய்யாறு வட்டாரம் மற்றும் நகரக் கிளை சார்பாக பணி நிறைவு பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. வட்டாரத் தலைவர்  ரேணுகாதேவி தலைமையில்  வட்டார செயலாளர் ஜான்சி பிரபா வரவேற்றார் .பணி நிறைவு பெற்ற ஆசிரியர்களுக்கு மாநில பொதுச் செயலாளர் ச. மயில், இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு அகில இந்திய பொதுக்குழு உறுப்பினர்   ச.டேவிட் ராஜன் ஆகியோர் நினைவு பரிசு வழங்கி வாழ்த்தி பேசினர். விழாவில் திருவண்ணாமலை மாவட்ட தலைவர் சாந்தி மாவட்ட செயலாளர்  கோ. வெங்கடபதி, மாவட்ட பொருளாளர்  து. கிருஷ்ணன் மற்றும் மாவட்ட துணை நிர்வாகிகள் கல்வி மாவட்ட நிர்வாகிகள் வட்டார நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை செய்யாறு நகர செயலாளர் டி .வி எஸ் சிவகலா, நகர பொருளாளர் எஸ். ஷர்மிலி ஆகியோர் ஒருங்கிணைத்து நடத்தினர்.  நிறைவாக செய்யாறு வட்டார பொருளாளர்  பூ.முருகன் நன்றி கூறினார்.

அம்பேத்கர் பிறந்த பிறந்த நாளை முன்னிட்டு திருவண்ணாமலை - திண்டிவனம் சாலையில் உள்ள அவரது உருவச்சிலைக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. கட்சியின் மாநில குழு உறுப்பினர் எம். சிவக்குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம் .வீரபத்திரன், எம். பிரகலநாதன், இரா. பாரி மற்றும் நகர நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.