சென்னை, ஆக. 1- சென்னை பாரிமுனை மாவட்ட ஆட்சியர் அலுவல கம் அருகே துறைமுகம் கிருஷ்ணன் கோயில் தெரு வில் 7 மாடி கட்டிடத்தில் பிஎஸ்என்எல் தொலைபேசி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு 100க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணி யாற்றி வருகின்றனர். இரவு நேரத்தில் 2 காவலாளிகள் பணியில் இருப்பார்கள். இந்நிலையில் வியாழ க்கிழமை அதிகாலை 5.30 மணியளவில், பிஎஸ்என்எல் அலுவலகத்தின் தரை தளத்தில் இருந்து கரும்புகை வந்தது. அதிர்ச்சியடைந்த காவலாளிகள் அவற்றை அணைக்க முயன்றுள்ளனர். ஆனால் புகை வேகமாக அனைத்து மாடிகளுக்கும் பரவி தீப்பிடிக்க ஆரம்பித்தது. இதுகுறித்த தகவலின் பேரில் சென்னை உயர்நீதிமன்றம், துறை முகம், ராயபுரம், வேப்பேரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் 50க்கும் மேற்பட்ட வீரர்கள் வந்து, சுமார் 5 மணி நேரம் போராடி தீயை அணைத்த னர். இந்த தீ விபத்தால் பல லட்சம் மதிப்பிலான கேபிள் வயர், கணினி. தொலைதொடர்பு சாதனங்கள் எரிந்து நாச மானதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து சென்னை வடக்கு கடற்கரை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, மின்கசிவு காரணமாக தீ விபத்து நடந்ததா, கேபிள் பழுதாகி தீ விபத்து ஏற்பட்டதா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வரு கிறார்கள்.