சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே ஏழாயிரம்பண்ணை பகுதியில் தனியார் பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வந்தது. மஞ்சள்ஓடை பட்டியில் உள்ள சோலை என்ற இந்த ஆலையில் வழக்கம் போல் பட்டாசு தயாரிப்பு பணிகள் நடைபெற்று வந்தது. அப்போது எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த 10ற்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
இந்த வித்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்துள்ளர். மேலும் சிலர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்கள் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.