மின்வாரியத்தில் 40 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்புக
மத்திய அமைப்பின் வேலூர் திட்டக்கிளை வலியுறுத்தல்
வேலூர், மே 24 - தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் வேலூர் கிளையின் 16வது மாநாடு வேலூர் சிஐடியு மாவட்டக்குழு அலுவலகத்தில் தோழர் என் சங்கரய்யா நினைவரங்கில் நடைபெற்றது. திட்டக்கிளை தலைவர் எம்.கோவிந்த ராஜ் தலைமை வகிக்க, துணை செயலாளர் அரி ராமு அனைவரையும் வரவேற்றார். துணைத் தலைவர் எஸ்.இன்பநாதன் கொடி யேற்றி வைக்க, துணை செயலாளர் இ.வெங்க டேசன் அஞ்சலி தீர்மாத்தை முன்மொழிந்தார். மாநிலத் துணைத் தலைவர் எஸ்.ஜோதி துவக்கி வைத்தும், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளை அறி முகம் செய்தும் மாநில செயலாளர் இ.விஜய லட்சுமி நிறைவு செய்தும் பேசினர். திட்டக்கிளை செயலா ளர் டி.ஜெகன் வேலை அறிக்கையை சமர்ப்பிக்க பொருளாளர் எம்.சின்ன துரை வரவு செலவு அறிக்கையை சமர்ப்பித் தார். சிஐடியு மாவட்டச் செய லாளர் எஸ்.பரசுராமன், கிருஷ்ணகிரி திட்டக்கிளை செயலாளர் ஏ.கருணாநிதி ஓய்வு பெற்றோர் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.தாமோதரன் ஆகியோர் வாழ்த்தி பேசினார். முடிவில் இணைசெயலாளர் ஆர்.முரளி கிருஷ்ணன் நன்றி கூறினார். தீர்மானங்கள் மின்வாரியத்தில் 40 ஆயிரம் ஆரம்பகட்ட காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். ஒப்பந்த ஊழி யர்களை மின்வாரியமே அடையாளம் கண்டு நேரடி யாக தினக்கூலி வழங்கிட வேண்டும். மின் நுகர்வோரை பாதிக்கும் மின் துறையை தனியார்மயப்படுத்தும் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிட வேண்டும். 01.12.2023 முதல் வழங்க வேண்டிய ஊதிய உயர்வுக்கான பேச்சுவார்த்தையை விரைந்து நடத்திட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.